ஏழாவது நாளாகத் தொடரும் எண்ணெய்ப் படலம் அகற்றும் பணி
கண்காட்சிகூடமாக மாறிய எர்ணாவூர் கடற்கரை
திருவொற்றியூர், பிப்.4:கப்பலிலிருந்து வெளியேறிய எண்ணெய்க் கழிவுகளை
அகற்றும் பணி ஏழாவது நாளாக சனிக்கிழமையும் தொடர்ந்தது. இந்நிலையில் இப்பகுதியே கண்காட்சிக் கூடமாக மாறி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
எண்ணெய்ப் படலத்தை இயந்திரங்களைக் கொண்டு அகற்ற கடலோரக் காவல் படையினர் முடிவு செய்தனர். ஆனால் அது இயலாததால் ஆள்கள் மூலம் இதனை அகற்றும் பணி தொடங்கியது. முதலில் எண்ணெய்க் கழிவு 4 டன் அளவிற்கே இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏழாவது நாளான சனிக்கிழமை இரு நூறு டன் அளவைத் தாண்டிவிட்டது. இப்பணியில் பல் துறை ஊழியர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
கண்காட்சி கூடமாக மாறி வரும் கடற்கரை:
இந்நிலையில் இதனைப் பார்வையிட நூற்றுக்கணக்கானக பொதுமக்கள் சாரை சாரையாக வந்து பார்வையிடுகின்றனர். வழுக்கி விழும் ஆபத்து நிறைந்த பாறாங்கற்களில் பொதுமக்கள் ஏறி வருவதை போலீஸாரும் தடுப்பதில்லை.
மீனவர்கள் பணியில் ஈடுபட்டதையடுத்து இதன் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதனையடுத்து எண்ணூர் துறைமுகம் சார்பில் சுமார் ஆயிரம் பேருக்கு தொடர்து உணவு அளிக்கப்பட்டு வருகிறது. இதனை விநியோகிக்கவும், வாங்கிச் செல்லவும் போட்டியிடும் நிலையும் நீடிக்கிறது. பொதுமக்கள் அதிகம் திரளுவதால் தாற்காலிக தள்ளுவண்டிக் கடைகளும் அதிகரித்துள்ளன. மேலும் தினமும் ஏதாவது ஒரு அரசியல் கட்சியின் தலைவர்கள், இரண்டாம் கட்டத் தலைவர்கள் வந்தவாறு உள்ளனர். அவர்களைச் சுற்றியொரு தொண்டர்கள் கூட்டம் என கண்காட்சிக் கூடமாகவே களைகட்டுகிறது எர்ணாவூர் பாரதியார் நகர் கடற்கரை.
ஆபத்தை உணராத செய்தியாளர்கள்
கடந்த நான்கு நாள்களாக ஒரே மாதிரியான செய்திகளை நேரடியாக ஒளிபரப்பிய செய்தியாளர்கள் புதுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக பைபர் படகுகளை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு எண்ணூர் துறைமுகம்வரை கேமராக்களுடன் சென்று திரும்புகின்றனர். இதற்கு ரூ.5 ஆயிரம்வரை மீனவர்கள் வசூலிப்பதைக் காண முடிந்தது. பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய செய்தியாளர்கள் எவ்வித பாதுகாப்பு சாதனங்களையும் அணியாமல், கடல்சார் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு மாறாக பயணிப்பது சரிதானா? மேலும் கடும் பாதுகாப்பு வளையத்திற்குள் துறைமுக வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கப்பலைப் படம் எடுக்க கடல் மார்க்கமாக அத்துமீறி நுழைவுவது எந்த வகையில் நியாயமானது என்ற கேள்விகளை துறைமுக அதிகாரிகள் எழுப்புகின்றனர்.
ஆபத்தை உணராத செய்தியாளர்கள்
கடந்த நான்கு நாள்களாக ஒரே மாதிரியான செய்திகளை நேரடியாக ஒளிபரப்பிய செய்தியாளர்கள் புதுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக பைபர் படகுகளை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு எண்ணூர் துறைமுகம்வரை கேமராக்களுடன் சென்று திரும்புகின்றனர். இதற்கு ரூ.5 ஆயிரம்வரை மீனவர்கள் வசூலிப்பதைக் காண முடிந்தது. பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய செய்தியாளர்கள் எவ்வித பாதுகாப்பு சாதனங்களையும் அணியாமல், கடல்சார் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு மாறாக பயணிப்பது சரிதானா? மேலும் கடும் பாதுகாப்பு வளையத்திற்குள் துறைமுக வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கப்பலைப் படம் எடுக்க கடல் மார்க்கமாக அத்துமீறி நுழைவுவது எந்த வகையில் நியாயமானது என்ற கேள்விகளை துறைமுக அதிகாரிகள் எழுப்புகின்றனர்.
No comments:
Post a Comment