Thursday, 27 April 2017

ரூ.100 கோடி மதிப்பிலான கோயில் நிலத்தை கைப்பற்ற
27-வது நாளாகத் தொடரும் முற்றுகை போராட்டம் 

திருவொற்றியூர், ஏப்.20: திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலுக்குச் சொந்தமான சுமார் 3 ஏக்கர் பரப்பளவிலான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள காலியிடத்தை துறைமுக இணைப்புச் சாலைத் திட்டத்தின் மறு குடியமர்த்தல் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டதை எதிர்த்து திருவொற்றியூர் குப்பம் மீனவர்கள் கடந்த கடந்த 27 நாள்களாக இதே இடத்தில் 
பந்தல்கள் அமைத்து முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  
     இருப்பினும் இப்பிரச்னையில் தொடர்புடைய  மாவட்ட நிர்வாகம், அறநிலையத் துறை, காவல்த்துறை உயர் அதிகாரிகள் எவ்வித முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்துவது மீனவர்கள், பொதுமக்களை அதிருப்தியடையச் செய்துள்ளது. 
பிரச்னையின் பின்னணி என்ன?
      துறைமுக இணைப்புச் சாலை திட்டத்தினால் வீடுகளை இழக்கும் என்.டி.ஓ. குப்ப மீனவ குடும்பங்களை மறுகுடியமர்த்தல் செய்வதில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் 
மேலாக பிரச்னை இருந்து வருகிறது. எர்ணாவூரில் ஒதுக்கப்பட்ட வீடுகளை 
ஏற்க மறுத்து வருவதே இதற்கு காரணம். இதனையடுத்து  என்.டி.ஓ.குப்பம் பகுதியில் மட்டும் சாலை அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் எண்ணூர் விரைவு சாலையில் உள்ள திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலுக்குச் சொந்தமான 3.34 ஏக்கர் நிலத்தில்  என்.டி.ஓ.குப்பத்தைச் சேர்ந்த 446 குடும்பங்களுக்கு  சுமார் ரூ.50 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி வீடுகள் அமைப்பதற்கான ஒதுக்கீட்டு உத்தரவுகளை கடந்த மார்ச் 28-ம் தேதி நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வழங்கினார். 
திருவொற்றியூர் குப்பம் மீனவர்கள் எதிர்ப்பு:
    என்.டி.ஓ.குப்பம் மீனவர்களுக்கு கோயில் நிலம் ஒதுக்கப்பட்டதையறிந்த திருவொற்றியூர் குப்பம் மீனவர்கள் அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தியாகராஜர் கோயிலில் சாமி தூக்கும் சேவையில் பாரம்பரியாக ஈடுபட்டு வரும் இக்குப்பத்தைச் சேர்ந்த சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மனையையோ அல்லது வீடுகள் அமைத்துத் தரும்படி பல ஆண்டுகளாகக் கோரி வருவதாகவும், இந்நிலையில் சாலை விரிவாக்க மறுகுடியமர்த்தல் திட்டத்தின்கீழ் இந்நிலத்தை ஒதுக்கி இருப்பதை ஏற்க முடியாது எனவும் இவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அமைச்சர் அறிவிப்பின் அடுத்த நாளே ஒதுக்கப்பட்ட இடத்தில் குவிந்த திருவொற்றியூர் குப்பம் மீனவர்கள் அங்கே பந்தல்கள் தங்கக் தொடங்கினர். போலீஸார், வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்ட சமாதானங்களை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள் கடந்த 23 நாள்களாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். 
அவசரகதியில் அமைச்சர் எடுத்த முடிவு?:பொதுமக்கள் குற்றச்சாட்டு
இது குறித்து திருவொற்றியூர் பகுதி பொதுமக்கள் கூறியது, 
   அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலத்தை மக்கள் நலத் திட்டங்களுக்கு அளிப்பதில் கடுமையான பல்வேறு நடைமுறைகள் உள்ளன. இந்த நடைமுறைகளின்படி அவ்வளவு எளிதாக கோயில் நிலத்தை ஒதுக்கிவிட முடியாது. காரணம் கோயில் நிலங்கள் என்பது பெரும்பாலும் முன்னோர்களால் தானம் வழங்கப்பட்டதும், இதனை நோக்கம் ஆன்மீகம், தர்ம காரியங்களுக்கு இந்நிலம் உதவும் என்பதுதான். இந்த நிலத்தை பொறுத்தவரை முறையான எவ்வித அனுமதியோ அல்லது உத்தரவோ 
அளிக்கப்படவில்லை என கோயில் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். அப்படியே இந்ந நிலம்தான் தேவையெனில் அதற்கான இழப்பீட்ட கோயிலுக்கு வழங்கிவிட்டுத்தான் மறு குடியமர்த்தல் திட்டத்தை செயல்படுத்தியிருக்க வேண்டும். இதனைவிடுத்து ரூ. 100 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை மறுகுடியமர்த்தல் திட்டத்திற்கு அறிவித்ததில் அவசர கதியும், முன்யோசனையின்மையும்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் பொறுப்பான மாவட்ட ஆட்சியர், மூத்த அமைச்சரே ஈடுபட்டிருப்பது பொதுமக்களை வேதனையடையச் செய்துள்ளது என்றனர்.
27 நாள்களைக் கடந்தும் அசையாத அதிகாரிகள்: 
    ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தில் மீனவ கிராம மக்கள் புகுந்து கடந்த 23 நாள்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் இப்பிரச்னையில் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர், அறநிலைய, காவல்த்துறை உயர் அதிகாரிகள் எவ்வித சலனமும் இன்றி மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக மீனவர்கள், பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இந்நிலத்தை அளிக்க எவ்வித உத்தரவாதமும் அளிக்காத நிலையில், மாவட்ட ஆட்சியர் அளித்த தகவலின் பேரில் அமைச்சர்  எவ்வாறு தன்னிச்சையாக அறிவித்தார் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது. மேலும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளாதது அனைவரையும் அதிருப்தியடையச் செய்துள்ளது. மீனவர்களைப் பொறுத்தவரை
நிலத்திற்கான உரிமையை விட பாரம்பரிய உரிமையை முன்னிறுத்துகின்றனர். மேலும் இந்நிலத்தை யாருக்கும் வழங்கக் கூடாது என்பதுதான் பொதுமக்களின் பெரும்பாலான கருத்தாக இருக்கிறது. இந்நிலையில் கடும் வெயில், விஷப் பூச்சிகளின் அபாயத்திற்கிடையே கடந்த  27 நாளாக சிறியவர், பெரியவர் என ஒட்டுமொத்தக் கிராமமும் வரும் நிலையில் இவர்களைச் சமாதானப்படுத்தி பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர எவ்வித முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. சட்டம் ஒழுங்கு கெடும் எனக் கூறி இடைத்தேர்தலை காரணம் காட்டிய அதிகாரிகளின் அடுத்த சாக்குப்போக்கு என்னவாக இருக்கப்போகிறதோ? 
      மக்கள் தொடங்கும் எந்த போராட்டமும் நாளாக நாளாக தானாகவே செயலிழந்துவிடும், எனவே போராட்டம் குறித்து கண்டுகொள்ளாமல் இருப்பதே சரியானது என்பது தற்போதைய அரசுகளின் ராஜதந்திர நடவடிக்கைகளாக இருக்கின்றன.  இதில் தற்போது திருவொற்றியூரும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
23 நாள்களாகத் தொடரும் போராட்டம்: 

ஆக்கிரமிப்பின் பிடியில் ரூ.100 கோடி மதிப்பிலான கோயில் நிலம்  

அதிகாரிகள் மெத்தனத்தால் பொதுமக்கள் அதிருப்தி

திருவொற்றியூர், ஏப்.20: திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலுக்குச் சொந்தமான சுமார் 3 ஏக்கர் பரப்பளவிலான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள காலியிடத்தை துறைமுக இணைப்புச் சாலைத் திட்டத்தின் மறு குடியமர்த்தல் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டதை எதிர்த்து திருவொற்றியூர் குப்பம் மீனவர்கள் கடந்த கடந்த 23 நாள்களாக இதே இடத்தில் 
பந்தல்கள் அமைத்துப் போராடி வருகின்றனர். 
     இருப்பினும் இப்பிரச்னையில் தொடர்புடைய  மாவட்ட நிர்வாகம், அறநிலையத் துறை, காவல்த்துறை உயர் அதிகாரிகள் எவ்வித முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்துவது மீனவர்கள், பொதுமக்களை அதிருப்தியடையச் செய்துள்ளது. 
பிரச்னையின் பின்னணி என்ன?
      துறைமுக இணைப்புச் சாலை திட்டத்தினால் வீடுகளை இழக்கும் என்.டி.ஓ. குப்ப மீனவ குடும்பங்களை மறுகுடியமர்த்தல் செய்வதில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் 
மேலாக பிரச்னை இருந்து வருகிறது. எர்ணாவூரில் ஒதுக்கப்பட்ட வீடுகளை 
ஏற்க மறுத்து வருவதே இதற்கு காரணம். இதனையடுத்து  என்.டி.ஓ.குப்பம் பகுதியில் மட்டும் சாலை அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் எண்ணூர் விரைவு சாலையில் உள்ள திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலுக்குச் சொந்தமான 3.34 ஏக்கர் நிலத்தில்  என்.டி.ஓ.குப்பத்தைச் சேர்ந்த 446 குடும்பங்களுக்கு  சுமார் ரூ.50 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி வீடுகள் அமைப்பதற்கான ஒதுக்கீட்டு உத்தரவுகளை கடந்த மார்ச் 28-ம் தேதி நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வழங்கினார். 
திருவொற்றியூர் குப்பம் மீனவர்கள் எதிர்ப்பு:
    என்.டி.ஓ.குப்பம் மீனவர்களுக்கு கோயில் நிலம் ஒதுக்கப்பட்டதையறிந்த திருவொற்றியூர் குப்பம் மீனவர்கள் அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தியாகராஜர் கோயிலில் சாமி தூக்கும் சேவையில் பாரம்பரியாக ஈடுபட்டு வரும் இக்குப்பத்தைச் சேர்ந்த சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மனையையோ அல்லது வீடுகள் அமைத்துத் தரும்படி பல ஆண்டுகளாகக் கோரி வருவதாகவும், இந்நிலையில் சாலை விரிவாக்க மறுகுடியமர்த்தல் திட்டத்தின்கீழ் இந்நிலத்தை ஒதுக்கி இருப்பதை ஏற்க முடியாது எனவும் இவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அமைச்சர் அறிவிப்பின் அடுத்த நாளே ஒதுக்கப்பட்ட இடத்தில் குவிந்த திருவொற்றியூர் குப்பம் மீனவர்கள் அங்கே பந்தல்கள் தங்கக் தொடங்கினர். போலீஸார், வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்ட சமாதானங்களை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள் கடந்த 23 நாள்களாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். 
அவசரகதியில் அமைச்சர் எடுத்த முடிவு?:பொதுமக்கள் குற்றச்சாட்டு
இது குறித்து திருவொற்றியூர் பகுதி பொதுமக்கள் கூறியது, 
   அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலத்தை மக்கள் நலத் திட்டங்களுக்கு அளிப்பதில் கடுமையான பல்வேறு நடைமுறைகள் உள்ளன. இந்த நடைமுறைகளின்படி அவ்வளவு எளிதாக கோயில் நிலத்தை ஒதுக்கிவிட முடியாது. காரணம் கோயில் நிலங்கள் என்பது பெரும்பாலும் முன்னோர்களால் தானம் வழங்கப்பட்டதும், இதனை நோக்கம் ஆன்மீகம், தர்ம காரியங்களுக்கு இந்நிலம் உதவும் என்பதுதான். இந்த நிலத்தை பொறுத்தவரை முறையான எவ்வித அனுமதியோ அல்லது உத்தரவோ 
அளிக்கப்படவில்லை என கோயில் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். அப்படியே இந்ந நிலம்தான் தேவையெனில் அதற்கான இழப்பீட்ட கோயிலுக்கு வழங்கிவிட்டுத்தான் மறு குடியமர்த்தல் திட்டத்தை செயல்படுத்தியிருக்க வேண்டும். இதனைவிடுத்து ரூ. 100 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை மறுகுடியமர்த்தல் திட்டத்திற்கு அறிவித்ததில் அவசர கதியும், முன்யோசனையின்மையும்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் பொறுப்பான மாவட்ட ஆட்சியர், மூத்த அமைச்சரே ஈடுபட்டிருப்பது பொதுமக்களை வேதனையடையச் செய்துள்ளது என்றனர்.
23 நாள்களைக் கடந்தும் அசையாத அதிகாரிகள்: 
    ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தில் மீனவ கிராம மக்கள் புகுந்து கடந்த 23 நாள்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் இப்பிரச்னையில் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர், அறநிலைய, காவல்த்துறை உயர் அதிகாரிகள் எவ்வித சலனமும் இன்றி மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக மீனவர்கள், பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இந்நிலத்தை அளிக்க எவ்வித உத்தரவாதமும் அளிக்காத நிலையில், மாவட்ட ஆட்சியர் அளித்த தகவலின் பேரில் அமைச்சர்  எவ்வாறு தன்னிச்சையாக அறிவித்தார் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது. மேலும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளாதது அனைவரையும் அதிருப்தியடையச் செய்துள்ளது. மீனவர்களைப் பொறுத்தவரை
நிலத்திற்கான உரிமையை விட பாரம்பரிய உரிமையை முன்னிறுத்துகின்றனர். மேலும் இந்நிலத்தை யாருக்கும் வழங்கக் கூடாது என்பதுதான் பொதுமக்களின் பெரும்பாலான கருத்தாக இருக்கிறது. இந்நிலையில் கடும் வெயில், விஷப் பூச்சிகளின் அபாயத்திற்கிடையே  23 நாளாக சிறியவர், பெரியவர் என ஒட்டுமொத்தக் கிராமமும் வரும் நிலையில் இவர்களைச் சமாதானப்படுத்தி பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர எவ்வித முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. சட்டம் ஒழுங்கு கெடும் எனக் கூறி இடைத்தேர்தலை காரணம் காட்டிய அதிகாரிகளின் அடுத்த சாக்குப்போக்கு என்னவாக இருக்கப்போகிறதோ? 
      மக்கள் தொடங்கும் எந்த போராட்டமும் நாளாக நாளாக தானாகவே செயலிழந்துவிடும், எனவே போராட்டம் குறித்து கண்டுகொள்ளாமல் இருப்பதே சரியானது என்பது தற்போதைய அரசுகளின் ராஜதந்திர நடவடிக்கைகளாக இருக்கின்றன.  இதில் தற்போது திருவொற்றியூரும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Monday, 17 April 2017

'ஐ.என்.எஸ். சென்னை' போர்க்கப்பலை 5 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்

இன்று முதல்வர் பழனிசாமி வருகை 

திருவொற்றியூர், ஏப்.16:முதல் முறையாக சென்னை வந்த 'ஐ.என்.எஸ். சென்னை' போர்க்கப்பலை இரு தினங்களில் மாணவர்கள், பொதுமக்கள் என சுமார் 5 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
   இந்திய கடற்படையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இணைக்கப்பட்ட 'ஐ.என்.எஸ். சென்னை' என்ற போர்க்கப்பல் தனது முதல் பயணமாக சனிக்கிழமை சென்னை வந்தது. அப்போது சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் வரிசையில் நின்று கொடியசைத்து வரவேற்றனர். பின்னர் மாணவர்கள்  கப்பலில் ஏறி சுற்றிப் பார்த்தனர். இதனையடுத்து சனிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை மெரினா கடற்கரை அருகே கடலில் ஒளி அலங்காரம் செய்யப்பட்டு இக்கப்பல் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் 
ஞாயிற்றுக்கிழமை கப்பலை பொதுமக்கள் பார்வையிட கடற்படை அனுமதித்தது. இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை மட்டும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என சுமார் 3 ஆயிரம் பேர் கப்பலை பார்வையிட்டதாகவும், இரு தினங்களில் கப்பலைப் பார்வையிட்டோரின் எண்ணிக்கை மொத்தம் சுமார் 5 ஆயிரம் என பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. திங்கள்கிழமை காலை 10.30 மணியளவில்  கப்பலைப் பார்வையிட தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் வருகைதர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகிழ்ச்சிகரமான அனுபவம்: பொதுமக்கள் நெகிழ்ச்சி
கப்பலைச் சுற்றிப்பார்த்தது குறித்து பெருங்களத்தூரைச் சேர்ந்த என்.சங்கர் (35) கூறியது,
   நானும் எனது நண்பர்களும் கப்பலைப் பார்வையிட்டோம். கடற்படை அதிகாரிகள் பேருந்தில் அழைத்துச் சென்றனர். பின்னர் கப்பலில் ஏறி முக்கிய பகுதிகளில் பார்வையிட அனுமதித்தனர். சுமார் ஒரு மணி நேரம் பார்வையிட்டோம். எங்களுக்கு கப்பலைப் பார்வையிடுவது இதுதான் முதல்முறையாகும். எனவே மகிழ்ச்சிகரமான அனுபவமாகவே இருந்தாலும் பார்வையிடுவது மட்டுமே போதுமானது அல்ல. ஏதாவது ஓரிடத்தில் நிறுத்தி வைத்து போர்க்கப்பலின் சிறப்பு, கடற்படையினரின் பணிகள் குறித்து விளக்கிக் கூறியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மேலும் பொதுமக்கள் எங்கே வரவேண்டும், அனுமதியை யார் தருவது என்பதை முன்னதாகவே முறையாக அறிவித்திருந்தால் பொதுமக்களுக்கு அலைச்சல் இருந்திருக்காது. மேலும் இது போன்ற கப்பல்கள் வருகை தரும்போது கூடுதல் நாள்கள் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்றார் சங்கர்.


தவறான தகவல்கள்தான் சிரமங்களுக்கு காரணம்

ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சக மக்கள் தொடர்பு அதிகாரி டி.சண்முகம் கூறியது, 
   போர்க்கப்பலை வரவேற்க மாணவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால்  ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் பார்வையிட அனுமதி என கடற்படை ஏதும் அறிவிக்கவில்லை. பொதுமக்கள் பார்வையிடத்தான் மெரினா கடற்கரையை ஒட்டி கப்பலை நிறுத்தியது . ஆனால் தவறான தகவல்களின் பேரில் பொதுமக்கள் 18-ம் தேதிவரை கப்பலை நேரில் பார்வையிடலாம் என செய்திகள் வெளியாகி உள்ளன. இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கணக்கானோர் நேப்பியால் பாலம் அருகே கடற்படை அலுவலகம் அருகில் குவிந்துவிட்டனர். இதன்பிறகு வேறு
வழியின்றி பொதுமக்கள் அழைத்துச் செல்லப்பட்டு கப்பலைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். முடிந்த அளவு பொதுமக்களுக்குச் சிரமம் ஏற்படாமல் 
முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன.  எனவே பொதுமக்களுக்கு இனி அனுமதி இல்லை என்றார் சண்முகம். 
இந்திய கடற்படை போர்க்கப்பல் சென்னை வருகை: பள்ளி மாணவர்கள் வரவேற்பு

முதல்வர் பழனிசாமி பார்வையிடுகிறார்


திருவொற்றியூர்,ஏப்.15:இந்திய கடற்படை போர்க்கப்பலான ஐ.என்.எஸ். சென்னை 
சனிக்கிழமை சென்னைத் துறைமுகம் வந்ததடைந்தது. அப்போது அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் கொடியசைத்து வரவேற்றனர். 
   பின்னர் கப்பலின் சிறப்பு, வருகை நோக்கம் குறித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதி கடற்படை அதிகாரி அலோக் பட்னாகர் கூறியது,
   கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஐ.என்.எஸ். சென்னை இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.  மும்பையில் உள்ள பொதுத்துறை நிறுவனமான மஜகான் ஷிப் யார்டில் கட்டப்பட்ட இக்கப்பலில் இதர போர்க் கப்பல்களில் உள்ளதைப் போன்று ஏவுகணைகள், கண்ணிவெடிகளை அழித்தல், பீரங்கி, ரேடார் உள்ளிட்ட அதிநவீன வசதிகள் இக்கப்பலில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அணு, உயிரி, வேதியியல் கருவிகள் பங்களிக்கும் போர்களிலும் இக்கப்பலைப் பயன்படுத்த முடியும். சுமார் 7,500 டன் எடை கொண்ட இக்கப்பல் 164 மீட்டர் நீளம், 17 மீட்டர் அகலம், 18 மீட்டர் உயரம் கொண்ட இக்கப்பலில் தற்போது 330 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.  முழுக்கமுழுக்க உள்நாட்டுத்தொழில் நுட்பங்களுடன் கட்டமைக்கப்பட்ட இக்கப்பலில் இணைக்கப்பட்டுள்ள பெரும்பாலான கருவிகள், உபகரணங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவைதான். 
மேலும் 40 கப்பல்கள்:
   கடற்படையின்  மேற்கு பிரிவின் கட்டுப்பாட்டில் இக்கப்பல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது நல்லெண்ணப் பயனமாகவே இக்கப்பல் சென்னை வந்துள்ளது. மேலும் இக்கப்பல் சோதனை இயக்கத்தில் இருந்தபோது 2015-ம் ஆண்டு சென்னை மாநகரம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது நிவாணப் பொருள்களை ஏற்றிக் கொண்டு சென்னைத் துறைமுகம் வந்து சென்றுள்ளது. இந்தியக் கடற்படை தொடர்ந்து நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. பழைய கப்பல்கள் நீக்கப்பட்டு புதிய மற்றும் கூடுதல் கப்பல்கள் இணைக்கப்பட்டு வருகின்றன. தற்போது மேலும் 40 சிறிய, பெரிய ரக அதிநவீன போர்க் கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றனர். 
தமிழக முதல்வர் பார்வையிடுகிறார்:
    துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் இக்கப்பலை தமிழக முதல்வர் பழனிசாமி திங்கள்கிழமை பார்வையிடுகிறார். இதனையடுத்து செவ்வாய்க்கிழமை இக்கப்பலின்  ஒத்திகை நிகழ்ச்சி நடுக்கடலில் நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர், நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்க அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர். இக்கப்பலைப் பார்வையிட ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர் என்றார் அலோக் பட்னாகர்.
     பேட்டியின் போது கப்பலின் கேப்டன் பிரவீன் நாயர், கடற்படை அதிகாரிகள் மகாதேவன், பிரசாந்த் மிஸ்ரா,  பாதுகாப்பு அமைச்சக மக்கள் தொடர்பு அதிகாரி சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
      இதனையடுத்து பொதுமக்கள் பார்வையிடும் வகையில் சனிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை மெரினா கடற்கரை அருகாமையில் கடலில் ஐ.என்.எஸ். சென்னை நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது கப்பல் முழுவதும் மிகுந்த ஒளி அலங்காரம் செய்யபட்டிருந்தது. இதனால் மெரினா வந்திருந்த பொதுமக்கள் கூடுதல் அழகுடன் கப்பலைக் கண்டு களித்தனர். 


சென்னை பெயர்க்காரணமும், மஞ்சம்பட்டி காட்டெருமையும்...

    இந்தியாவின் முக்கிய சுதந்திர போராட்ட வீரர்கள், மன்னர்கள், முக்கிய நதிகளின் பெயர்கள் போர் மற்றும் ரோந்துக் கப்பல்களுக்குச் சூட்டப்படுவது வழக்கம். இதில் தற்போது முக்கிய நகரங்களின் பெயர்களும் இணைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கொச்சி, கொல்கத்தா ஆகியவற்றுக்கு அடுத்து மூன்றாவதாக சென்னை மாநகரத்தின் பெயர் இப்போர்க்கப்பலுக்குச் சூட்டப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் மற்றும் தலைநகர் சென்னையின் பெருமைகள் இக்கப்பலில் பறைசாட்டப்பட்டுள்ளன. இக்கப்பலின் அடையாளச் சின்னத்தில் திருப்பூர், தேனி மாவட்டத்தை உள்ளடக்கிய மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் காணப்படும் அரிய வகை காட்டெருமை, சென்னை மாநகர வரைபடம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. மேலும் மஞ்சம்பட்டி காட்டெருமை கட்டுக்கோப்பான உடலமைப்பு, துணிச்சல், போர்க்குணம், குறைந்து வரும் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களும், சென்னை மாநகரத்தின் பெருமைகள் குறித்தும் கப்பலின் பல்வேறு இடங்களிலும், விளக்கக் குறிப்பேட்டிலும் விரிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பது சிறப்பு அம்சம் ஆகும்.
வங்கக் கடலில் விசைப்படகு மூலம் 45 நாள்களுக்கு மீன் பிடிக்கத் தடை தொடங்கியது 

கடனுதவி வழங்க மீனவர்கள் கோரிக்கை 

திருவொற்றியூர், ஏப்.15:வங்கக் கடலில் விசைப் படகுகள் மூலம் 45 நாள்களுக்கு ஆண்டுதோறும் விதிக்கப்படும் தடைகாலம் சனிக்கிழமை தொடங்கியது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் சுமார் 8,500 விசைப்படகுகள் இதில் பங்கேற்று நிறுத்தி வைக்கப்பட உள்ளன. 
     கோடை காலங்களில் வங்கக் கடல் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதால்  இக்காலங்களில் விசைப்படகுகள் மூலம் மீன் பிடித்தால் மீன் குஞ்சுகளும் வலையில் சிக்கிவிடும்.  இதனால் படிப்படியாக மீன்வளம் குறையும் அபாயம் ஏற்படும் எனக் கருதி கடந்த 2000-ஆண்டு வங்கக் கடல் பகுதியில் 45 நாள்களுக்கு விசைப்படகுகள் மூலம் மீன் பிடிக்க மத்திய அரசு தடை விதித்தது. இது கடந்த 17 ஆண்டுகளாக இந்த தடை நடைமுறையில் தொடர்கிறது. இதற்கு மீனவர்களும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில் இரு ஆண்டுகளுக்கு முன்பு இத்தடை காலத்தை ஆண்டுக்கு 61 நாள்களாக நீடிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கு மீனவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து 45 அல்லது 61 நாள்களா என்பதை மாநில அரசுகளை முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழகத்தைத் தவிர ஆந்திரா, ஒடிசா, மஹாராஷ்டிரா, கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் ஆண்டுக்கு 61 நாள்கள் தடையை ஏற்றுள்ளன.  தமிழகத்தைப் பொருத்தவரை ஏற்கனவே இருந்துவந்த 45 நாள் தடையே தொடரும் என தமிழக அரசு அறிவித்துவிட்டது. இத்தடைகாலம் மே 29-ம் தேதி முடிவுக்கு வரும். இத்தடை காலத்தில்
விசைப்படகுகளை பழுது பார்க்கும் பணி, மீனவர்களுக்கு ஓய்வளிப்பது உள்ளிடவை மேற்கொள்ளப்படும். மீன் பிடி தடைகாலத்தில் மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
மீன் விலை உயருமா?
   சென்னை காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் விசைப்படகுகள் மூலம் அதிக அளவில் மீன்கள் பிடித்துக் கொண்டுவரப்படுகின்றன. மேலும் சென்னை மாநகர மக்களால் விரும்பி உண்ணப்படும் வஞ்சிரம், வவ்வால், சங்கரா, ஊழா, நண்டு, இறால் உள்ளிட்டவைகள் விசைப்படகுகள் மூலம்தான் கிடைக்கின்றன. எனவே தற்போது இத்தடைகாலம் தொடங்கியுள்ளதால் மீன்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு விலையும்  சற்று கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் மேற்கு கடலோரத்தில் பிடிபடும் மீன்கள், கட்டுமரங்கள், பைபர் படகுகள் மூலம் குறைந்த ஆழத்தில் பிடிபடும் சிறிய வகை மீன்கள் தொடர்ந்து கிடைக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர். 


மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க வேண்டும் - எம்.இ.ரகுபதி, தலைவர், (சென்னை விசைப்படகு மீனவர் நலச் சங்கம்)
   மீன்பிடித் தடைகாலம் என்பது கடல் வளத்தை பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையாகும். எனவே அனைத்து தரப்பினரும் தொடர்ந்து ஒத்துழைத்து வருகிறோம். ஆனால் இதனால் படகு உரிமையாளர்கள், கூலித்தொழிலாளிகள் என அனைவருமே பாதிப்புக்கு உள்ளாகிறோம். மீனவ குடும்பம் ஒன்றுக்கு ரூ.2,000 ஆயிரம் மட்டுமே அரசால் வழங்கப்படுகிறது. இத்தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என பல ஆண்டுகளாகக் கோரி வருகிறோம். மேலும் இத்தடையால் படகு உரிமையாளர்கள் கடுமையான பொருளாதார இழப்புக்கு ஆளாகின்றனர். மேலும் காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் விசைப் படகுகளை கரைக்குக் கொண்டு வந்து பழுது பார்ப்பதற்கான இருப்புப் பாதையுடன் கூடிய சாய்வு தளம் இல்லை. வேறு வகையில் பழுது பார்ப்பதால் படகுகள் சேதமடையும் வாய்ப்புகள் உள்ளன. எனவே இவ்வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும். தற்போது சுற்றுச் சூழல் பாதிப்பு, குறைந்து வரும் மீன்வளம், கூலித் தொழிலாளர்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் மீன்பிடித் தொழில் ஆண்டுக்கு ஆண்டு நலிவடைந்து கொண்டே வருகிறது. எனவே இத்தொழிலை மீட்டெடுக்கும் முயற்சியாக விவசாயக் கடன் போன்று  தடை காலத்தில் படகுகளை முழுமையாகப் பழுது பார்க்க மானியத்துடன் கூடிய கடன் உதவி  வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ரகுபதி. 
தீவிரச் சோதனைகளையும் மீறி அரியவகை செம்மரக் கடத்தல் தொடர்வது ஏன்?

பின்னணியில் சர்தேச கடத்தல் மாபியாக்கள்

திருவொற்றியூர், ஏப்.13:சுங்கத்துறை, காவல்த்துறை, வருவாய்ப் புலனாய்வுத் துறை உள்ளிட்ட அனைத்து முக்கிய ஏஜென்சிகளும் தீவிரச் சோதனையில் ஈடுபட்டு வந்தும் அரியவகை தாவரமாக அறிவிக்கப்பட்டுள்ள செம்மரங்கள் தொடர்ந்து கடத்தப்படுவது சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்களைக் கவலையடையச் செய்துள்ளது. 
   ஏப்.7, 2015-ல் விடியற்காலையில் தமிழகத்திற்குக் கிடைத்த அதிர்ச்சி செய்தி செம்மரம் வெட்டச் சென்ற திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 20 பேரை ஆந்திர போலீஸார் சுட்டுக் கொன்றனர் என்பதுதான். இதனைத் தொடர்ந்து இருமாநில உறவுகள்கூட பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது. இந்த அளவிற்கு தொழிலாளர்களை சுட்டுக் கொல்லக் கூடிய முடிவை எடுத்ததற்கு காரணம் இதர நடவடிக்களால் செம்மரம் வெட்டுபவர்களை தடுக்க முடியாததுதான் என ஆந்திர போலீஸார் கூறினர். அப்படியும் தடுக்க முடியவில்லை என்பது இச்சம்பவம் நடைபெற்று  இரண்டு ஆண்டுகளைக் கடந்த பிறகும் உணர முடிந்துள்ளது.
     செம்மரக் கடத்தலில் மரங்களை வெட்டுவதும், அங்கிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்குக்கு கடத்துவதும்தான் முக்கியப் பணியாகும். உயிரைப் பணயம் வைக்கும் ஏழைத் தொழிலாளர்களே இதில் பங்கு வகிக்கின்றனர். பிறகு வாகனங்களில் கடத்துவது, சரக்குப் பெட்டகங்களில் வேறு சரக்குகளுக்குப் பதிலாக செம்மரங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும், அங்கிருந்து ஹவாலா மூலம் அந்நியச் செலாவணியை இடம் மாற்றுவதும் சர்வதேச கடத்தல் மாபியாக்களின் பணியாக உள்ளது.
அரியவகைத் தாவரமான செம்மரத்தின் சிறப்பும்:
    அழிந்து வரும் அரிய வகை விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் காப்பதற்கான சர்வதேச அமைப்பு (CITES- The Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora) செம்மரத்தை அரிய வகைத் தாவரமாக அறிவித்துள்ளது. இம்முடிவை தற்போது கடத்தலில் தொடர்புடைய நாடுகளும் கூட ஏற்றுக்கொண்டுதான் உள்ளன. அதிக வெப்பநிலை கொண்ட பகுதிகளில் வளரும் தன்மை கொண்ட செம்மரங்கள் உலகிலேயே தென்னிந்தியாவில் மட்டுமே இருக்கின்றன. அதிலும் பெரும்பகுதி ஆந்திர மாநிலத்திலும், தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களிலும்தான் இம்மரங்கள் உள்ளன. நறுமண வாசனை ஏதுமற்ற 
செம்மரங்கள் உறுதியானது மட்டுமல்ல பளபளக்கும் தன்மை கொண்டது. எனவே நீண்ட காலம் உபயோகப்படுத்தும் பொருள்களான இசைக்கருவிகள், விளையாட்டுக் கருவிகள் இதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இது தவிர விலை உயர்ந்த அரிய வகை மருந்துகள் தயாரிக்கவும் செம்மரங்கள் உதவுகின்றன.
சர்வதேச சந்தை டன் விலை ரூ. 1.50 கோடி: 
   செம்மரங்களைப் பயன்படுத்துவதில் சீனா, சிங்கப்பூர், ஜப்பான், மலேசியா உள்ளிட்ட நாடுகள்தான் முக்கிய இடம் வகிக்கின்றன. ஆண்டுக்கு சுமார் 3 ஆயிரம் டன் செம்மரக் கட்டைகள் தேவையிருக்கின்றன. ஆனால் சர்வதேசவிதிமுறைகளை உள்ளடக்கிய அரசு  அனுமதி பெற்ற விற்பனை என்பது மிகவும் சொற்பம்தான். எனவேதான் செம்மரங்களுக்கு இவ்வளவு கிராக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சர்வதேசச் சந்தையில் செம்மரத்தின் விலை டன் ஒன்றுக்கு சுமார் ஒன்றரைக் கோடி ரூபாய் அளவுக்கு உள்ளது. எனவே ஒரு கண்டெய்னரில் 10 டன் செம்மரங்களை வெற்றிகரமாகக் கடத்திவிட்டால் கடத்தல்காரர்களுக்கு ரூ. 15 கோடிவரை பணம் கிடைக்கும். எனவேதான் மரங்களை வெட்டி எடுத்து வர சங்கிலித் தொடராகப் பலரையும் பயன்படுத்துவதும், அனைவருக்கும் பணத்தை வாரியிரைப்பதும் 
கடத்தல்காரர்களுக்கு கை வந்த கலையாக உள்ளது.
ஏழ்மையை மூலதனமாக்கும் கடத்தல் மாபியாக்கள்:
    தமிழகத்தின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதி ஜவ்வாது மலை. கடல்மட்டத்திலிருந்து சுமார் 2,500 அடிவரை உயரத்தில் உள்ள ஜவ்வாது மலையில் சுமார் 250-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி எழில் கொஞ்சினாலும் வருமானத்திற்கு வழியேதும் இல்லை. இங்குள்ளவர்களுக்கு மரம் வெட்டுவதுதான் முக்கிய தொழிலாக உள்ளது.   இதேமாதிரியான நில அமைப்பு கொண்ட பகுதி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சேஷாசலம் வனப்பகுதி. ஆனால் இங்கு ஏழ்மைக்கு இடமில்லை. காரணம் இப்பகுதியில் உலகில் விலைமதிப்பு கொண்ட செம்மரங்கள் விளைகின்றன என்பதுதான். அடர்ந்த காடுகளைக் கொண்ட இப்பகுதியை தொடர்ந்து போலீஸார், வனக்காவலர்களால் கண்காணிப்பது இயலாததாக உள்ளது.
இங்குதான் கடத்தல்காரர்கள் தங்களது வலையை விரிக்கின்றனர். ஏழ்மையைப் பயன்படுத்தி ஜவ்வாது மலை கிராமவாசிகளுக்கு ரூ. 2,000 தினக்கூலி அளிக்கவும், அதனை முன்பணமாகவே கொடுத்தும், அழைத்து வரும் தரகர்களுக்கும் தக்க சன்மானம் அளிப்பதால் மரம் வெட்டும் பணி எளிதாகவே நடைபெறுகிறது. இது தவிர அரசு இயந்திரங்களையும் கடத்தல் சங்கிலியில் எளிதாகவே இந்த மாபியாக்கள் இணைத்துவிடுகின்றனர். 
தொடரும் கடத்தல்  சம்பவங்கள்: 
   கடந்த மாதம் 5 கண்டெய்னர்களில் பிளாஸ்டிக் குழாய்கள் ஏற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்ட ஆவணங்களுடன் ஆந்திராவிலிருந்து முதலில் வந்த ஒரு கண்டெய்னரைச் சோதனையிட்டபோது அதில் 10 டன் செம்மரக்கட்டைகள் இருந்தன. இது குறித்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே லாரி டிரைவர், உரிமையாளர், ஏற்றுமதியாளர், சுங்க முகவர் உள்ளிட்ட அனைவரும் தலைமறைவானது மட்டுமல்ல மீதம் வரவேண்டிய நான்கு கண்டெய்னர்களும் திரும்பவும் எங்கோ கொண்டு சென்றுவிட்டார்கள். இந்த அளவிற்கு கடத்தல்காரர்களின் சங்கிலித் தொடர் இணைப்புகள் உள்ளன. 
இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: 
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது,
    சர்வதேச கடத்தலை மாபியாக்களால் செம்மரம் கடத்தப்படுவது மட்டுமல்லாமல் 
ஏழ்மையில் உழலும் தொழிலாளர்களும் பலிகடாவாக்கப்படுகின்றனர். இதில் வரும் அதிக அளவிலான கள்ளப் பணத்தால் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், கடத்தல்காரர்கள், தீவிரவாதிகள், சமூக விரோதிகள் என அனைவரும் செழிக்கின்றனர். இது தேசநலனுக்கு நல்லது அல்ல. மேலும் உலகின் அரிய வகைத் தாவரமான செம்மரங்கள் நமது நாட்டில் இருப்பது பெருமை மட்டுமல்ல. எனவே இதில் தொடர்புடைய மாநில அரசுகள் இணைந்து  தீவிரக் கண்காணிப்பை மேற்கொள்ளவேண்டும். கடத்தல்காரர்களை அனைத்து நிலைகளிலும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். ஏழைத் தொழிலாளர்களை கடத்தல் வாணிபத்தில் பலிகடாவாக்காமல் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான உதவிகளையும் செய்து தரவேண்டும். இவை மட்டுமே செம்மரக் கடத்தலை நிரந்தரமாகத் தடுப்பதாக அமையும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. 

Friday, 7 April 2017

தோல்வி பயத்தில்தான் தேர்தல் ஆணையத்தை நாடுகின்றனர்

டி.டி.வி. தினகரன்

திருவொற்றியூர், ஏப்.6:ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மக்களைச் சந்தித்து வெற்றி பெற முடியாதவர்கள்தான் தேர்தல் ஆணையத்தில் தினமும் பொய்ப் புகார்களை அளித்து வருகின்றன என அதிமுக (அம்மா) வேட்பாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
   ஆர்.கே.நகர் தொகுதி தண்டையார்பேட்டை பகுதியில் வியாழக்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டபோது செய்தியாளர்களிடம்  தினகரன் கூறியது, 
    தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து புகார் அளித்து வரும் கட்சிகள் மக்களைச் சந்தித்து புகார் கூற வேண்டும். தேர்தலைத் தள்ளிவைக்க வேண்டும், வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை எழுப்பும் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம்தான் பதில் அளிக்க வேண்டும். நாங்கள் தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டுத்தான் செயல்பட்டு வருகிறோம். எனவே ஆணையத்தின் எந்த நடவடிக்கையையும் ஏற்போம்.
    அதிமுக என்பது தமிழகத்தில் மிகப்பெரிய இயக்கம். எனவே தேர்தல் பணியாற்றுவதற்காக ஏராளனமானோர் ஆர்.கே.நகர் வந்திருப்பது இயல்பானது.
மேலும் நாங்கள் வாக்களர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாகக் கூறப்படும் புகார்களில் உண்மை இல்லை. வெளியூரில் இருந்த வந்து தங்கியிருப்பவர்களுக்கான
அன்றாடச் செலவுக்கு வைத்திருந்த பணத்தை பொய்ப்புகார் காரணமாக பறிமுதல் செய்துள்ளனர். யார் வெற்றி பெற்றால் இத்தொகுதி வளம் பெறும் என்பதை இப்பகுதி மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர். எனவே நான் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெருவது உறுதி என்றார் தினகரன்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு தீர்வு காண தமிழக அரசு தவறிவிட்டது

மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

திருவொற்றியூர், ஏப்.6:புதுதில்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்குத் தீர்வு காண தமிழக அரசு தவறிவிட்டது என தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி தொகுதி முக்கியப் பிரமுகர்களுடனான கருத்தாய்வுக் கூட்டம் திமுக சார்பில் ராயபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கருத்துக்களைக் கேட்டறிந்தார். அப்போது ஸ்டாலின் பேசியது,
    இன்றைக்கு தமிழக பல்வேறு துறைகளின் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது. இதனால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட அனைவருமே போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுதில்லியில் போராடி வரும் தமிழக
விவசாயிகளின் போராட்டத்திற்கு தீர்வு காண தமிழக அரசு தவறிவிட்டது. எதிர்கட்சிகளான நாங்கள் அவர்களைச் சந்தித்து பேசத்தான் முடியும். தமிழக முதல்வர் நேரில் சென்று பிரதமரைச் சந்தித்து இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் முதல்வர் பழனிசாமி இடைத்தேர்தல் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்.
    ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் இப்பகுதியில் உள்ள அத்தனை பிரச்னைகளையும் என்னிடம் தெரிவித்துள்ளார். அவர் 
இதே பகுதியில் வசிப்பதால் மக்களின் குறைகளை அறிந்து நிறைவேற்றக் கூடியவர். ஆளும்கட்சியினர் என்னதான் தில்லுமுல்லுகளைச் செய்தாலும் தி.மு.க.வின் வெற்றியைத் தடுக்க முடியாது என்றார் ஸ்டாலின். 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்:

தேர்தலைக் கண்காணிக்க 70 மத்திய அரசு அதிகாரிகள் அடங்கிய பறக்கும் படை  

டி.கார்த்திகேயன் தகவல்  

திருவொற்றியூர்,ஏப்.6: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு அலுவலர்கள் அடங்கிய 70 பறக்கும் படை அணிகள் வியாழக்கிழமை முதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் என மாவட்டத் தேர்தல் அதிகாரியும், சென்னை மாநகராட்சி ஆணையருமான டி.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
   ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் குறித்து வியாழக்கிழமை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது, 
    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. சுமார் 800 மத்திய படையினர் ஏற்கனவே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய, மாநில அரசு அதிகாரிகள் அடங்கிய 30 பறக்கும் படை குழுக்கள் வாகனச் சோதனை, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
நுண் பார்வையாளர்கள்:
   இந்நிலையில் இத்தொகுதியில் உள்ள 7 வார்டுகளில் தலா 10 பேர் கொண்ட நுண் பார்வையாளர்களுடன் கூடிய பறக்கும் படைகள்  (Micro Observer Flying Squad) அமைக்கப்பட்டுள்ளன. இதில் 70 மத்திய அரசு அதிகாரிகள் நுண்பார்வையாளர்களாகச் செயல்படுவார்கள். இவர்களை இப்பகுதியை நன்கு அறிந்த போலீஸார் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் செல்வார்கள்.  24 மணி நேரமும் மூன்று குழுக்களாகப் பிரிந்து வேவு பார்க்கும் பணியில் இவர்கள் ஈடுபடுவார்கள். எங்காவது முறைகேடுகள், பணப் பட்டுவாடா உள்ளிட்டவைகள் குறித்து தகவல்கள் கிடைத்தால் உடனடியாக 
தேர்தல் அதிகாரிக்கோ, பறக்கும் படையினருக்கோ தகவல் அளிக்கலாம். இக்குழுவினர் ஏப்.11-வரை பணியில் ஈடுபடுவார்கள். 
பணப்பட்டுவாடாவைத் தடுப்பது சவாலாக உள்ளது:
    தேர்தலை முறைகேடுகள் இன்றி நடத்துவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் ஆணையம் எடுத்து வருகிறது. ஆனால் பணப்பட்டுவாடா குறித்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பது பெரும் சவாலாகவே உள்ளது. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்குச் செல்வதற்குள் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் தப்பிவிடுகின்றனர். நேற்றுவரை ரூ.14 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே வாகன சோதனையின்போது சிக்கிய ரூ.7 லட்சம் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவருடையது எனவும், வியாபாரம் நிமித்தமாக பணத்தை எடுத்து வந்ததாக
ஊர்ஜிதமானதையடுத்து பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. பணப் புழக்கத்தை தடுக்க
வருமானவரித்துறையினரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார் கார்த்திகேயன்.


புதுடில்லியின் நேரடிப் பார்வையில் ஆர்.கே.நகரின் கண்காணிப்புக் கேமரா   

  பார்வையாளர்கள் அனைவருமே மத்திய அரசு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது. 
    ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடவடிக்கைகள் நாடுமுழுவதும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. மேலும் பணப்பட்டுவாடா, முன்னாள், இன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் என 50 ஆயிரம் கட்சி நிர்வாகிகள் குவிந்துள்ளனர் என்பது போன்ற தகவல்கள் பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளன. இந்நிலையில் எந்தவகையிலும் வாக்களிக்கப் பணம் கொடுப்பதைத் தடுப்பது என தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் மாநில அரசு அதிகாரிகளை நம்பாமல் அனைத்து நிலைகளிலும் மத்திய அரசு ஊழியர்களை பார்வையாளர்களாக நியமித்துள்ளது ஆணையம். 
     இவர்கள் அனைவருமே நேரடியாகத் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு தகவல்களை அளித்து வருகிறார்கள். இது தவிர மத்திய அரசின் பல்வேறு உளவுப் பிரிவுகள் ஆர்.கே.நகர் தொகுதி முழுதும் தகவல்களைத் திரட்டி டெல்லிக்கு அனுப்பி வருகின்றனர். இதனை உறுதி செய்யும் வகையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் மாவட்டத் தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் கூறுகையில், எனது 20 ஆண்டு ஐ.ஏ.எஸ். பணியில் இது போன்றதொரு கடுமையான தேர்தல் ஏற்பாடுகளை நான் பார்த்தது இல்லை.  முன்பெல்லாம் தீவிரக் கண்காணிப்பு பணிகள் என்பது சில இடங்களில் மட்டுமே இருக்கும். ஆனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 256 வாக்குச் சாவடிகளும் இவ்வாறு கண்காணிக்கப்படுவது  இதுவே முதல்முறை எனக்குறிப்பிட்டுள்ளார். மொத்தத்தில் ஆர்.கே.நகரை கண்காணிக்கும் கேமரா புதுடில்லியிலிருந்து கண்காணிக்கப்படுகிறது என்பதே உண்மை நிலவரம்.