Friday, 7 April 2017

தோல்வி பயத்தில்தான் தேர்தல் ஆணையத்தை நாடுகின்றனர்

டி.டி.வி. தினகரன்

திருவொற்றியூர், ஏப்.6:ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மக்களைச் சந்தித்து வெற்றி பெற முடியாதவர்கள்தான் தேர்தல் ஆணையத்தில் தினமும் பொய்ப் புகார்களை அளித்து வருகின்றன என அதிமுக (அம்மா) வேட்பாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
   ஆர்.கே.நகர் தொகுதி தண்டையார்பேட்டை பகுதியில் வியாழக்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டபோது செய்தியாளர்களிடம்  தினகரன் கூறியது, 
    தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து புகார் அளித்து வரும் கட்சிகள் மக்களைச் சந்தித்து புகார் கூற வேண்டும். தேர்தலைத் தள்ளிவைக்க வேண்டும், வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை எழுப்பும் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம்தான் பதில் அளிக்க வேண்டும். நாங்கள் தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டுத்தான் செயல்பட்டு வருகிறோம். எனவே ஆணையத்தின் எந்த நடவடிக்கையையும் ஏற்போம்.
    அதிமுக என்பது தமிழகத்தில் மிகப்பெரிய இயக்கம். எனவே தேர்தல் பணியாற்றுவதற்காக ஏராளனமானோர் ஆர்.கே.நகர் வந்திருப்பது இயல்பானது.
மேலும் நாங்கள் வாக்களர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாகக் கூறப்படும் புகார்களில் உண்மை இல்லை. வெளியூரில் இருந்த வந்து தங்கியிருப்பவர்களுக்கான
அன்றாடச் செலவுக்கு வைத்திருந்த பணத்தை பொய்ப்புகார் காரணமாக பறிமுதல் செய்துள்ளனர். யார் வெற்றி பெற்றால் இத்தொகுதி வளம் பெறும் என்பதை இப்பகுதி மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர். எனவே நான் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெருவது உறுதி என்றார் தினகரன்.

No comments:

Post a Comment