Saturday, 11 February 2017

முத்தியால்பேட்டை மல்லிகேஸ்வர் மரகதாம்பாள் கோயில் மகாகும்பாபிஷேகம்  

திருவொற்றியூர், பிப்.9:தமிழகத்தின் பழமையான கோயில்களில் ஒன்றான சென்னை முத்தியால்பேட்டை  மல்லிகேஸ்வரர் உடனுறை மரகதாம்பாள் கோயில் 
மகாகும்பாபிஷேகம் வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. 
     இதற்கான விழா நிகழ்ச்சிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. திங்கள்கிழமை கலசாபிஷேகம், யாகசாலை நிர்மாணம் உள்ளிட்டவைகளும், செவ்வாய்க்கிழமை பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தனம் சாத்துதலும் நடைபெற்றன. புதன்கிழமை அம்மனுக்கு அஷ்டபந்தனம் சாத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  இந்நிலையில் வியாழக்கிழமை காலை 4.30 மணிக்கு பூஜைகள் தொடங்கின. பின்னர் சுமார் 7.30 மணியளவில் ராஜகோபுரத்தின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது 
அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. அப்போது பக்தி பரவசத்தில் ஈஸ்வரா, ஈஸ்வரா என உரத்த குரலில் கோசமிட்டனர். இதனையடுத்து கும்பாபிஷேக
நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ஏ.ரமேஷ், குருக்கள் எஸ்.சேகர், காளிதாஸ் சிவாச்சாரியார் மற்றும் சிவனடியார்கள் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி அன்னதானம், தண்ணீர், மோர் பந்தல்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

No comments:

Post a Comment