எண்ணூர் துறைமுக ரயில்வே கடவுப் பாதையில் லாரி மோதி விபத்து
போக்குவரத்து ஸ்தம்பித்தது
திருவொற்றியூர், பிப்.16:எண்ணூர் துறைமுக ரயில்வே கடவுப் பாதையில் லாரி மோதி தடுப்பு
தாழ்வாரம் உடைந்து விழுந்தது. இதனையடுத்து ரயில் பாதை மின்சாரம் லாரிகள் மீது பாயலாம் என்பதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் சில மணி நேரங்கள் போக்குவரத்து அடியோடு ஸ்தம்பித்தது.
எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளி அதானி துறைமுகங்களுக்குச் செல்லும் பிரதான சாலையில் ரயில்வே கடவு பாதை உள்ளது. வியாழக்கிழமை காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் நோக்கி இரும்புத் தளவாடங்கள் ஏற்றிச் சென்ற லாரி கடவு பாதை தாழ்வு கம்பித் தடங்கள் மீது மோதியது. இதனையடுத்து ரயில்பாதை மின்கம்பிகள் உரசாமல் இருக்க உயரத்தைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்டிருக்கும் தாழ்வு கம்பித் தடங்கள் கீழே விழுந்தன. இதனையடுத்து இதே தடத்தின் வாகனங்கள் சென்றால் மின்கம்பிகள் உரசி பெரும் தீவிபத்து ஏற்படும் அபாயம் உண்டாகியது. இதனையடுத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டன. இதனையடுத்து சுமார் 3 மணி நேரம் இரண்டு துறைமுகங்களுக்குமான போக்குவரத்து அடியோடு ஸ்தம்பித்தது.
சீரமைப்பு:
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் போக்குவரத்து மேலாளர் கருப்பையா வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை மேற்கொண்டார். பின்னர் ரயில்வே மற்றும் துறைமுக ஊழியர்கள் இருபதுக்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு சேதமடைந்த தாழ்வு கம்பித் தடங்கள் சீரமைக்கப்பட்டு கடவுப் பாதையில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டது.
No comments:
Post a Comment