Saturday, 11 February 2017


கப்பல் விபத்து குறித்து தகவல் தெரிவிப்பதில் தாமதம் இல்லை

கடலோரக் காவல் படையின் புகாருக்கு காமராஜ் துறைமுகம் மறுப்பு 

திருவொற்றியூர், பிப்.3:கப்பல்கள் விபத்துக்குள்ளானது குறித்த தகவல் தாமதமாகவே தங்களுக்கு தெரிவிக்கப்பட்டது என கடலோரக் காவல்படை பிராந்திய தளபதி வெள்ளிக்கிழமை தெரிவித்த புகாருக்கு காமராஜர் துறைமுக நிர்வாகம் மறுப்பும், விளக்கமும் தெரிவித்துள்ளது.
இது குறித்து துறைமுக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
    கடந்த சனிக்கிழமை விபத்து நடந்தவுடன் துறைமுகத்தின் முக்கிய அதிகாரிகள் இந்த இடத்திற்குச் சென்று ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது அனைத்து விபரங்களும் முடிந்த அளவு சேகரிக்கப்பட்டன. இதில் உயிரிழப்பு ஏதும் இல்லை, சுற்றுச் சூழலுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் எண்ணெய்க் கசிவு ஏதும் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது. இது உடனடியாக ஊடகங்களுக்கும் தெரிவிக்கப்பட்டன. பின்னர் ஜன.30 தேதி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் அடையாளம் காண முடியாத வகையில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விபத்து நடைபெற்று மிகக் குறைந்த கால அளவில் கடலோரக் காவல்படைக்கு துறைமுக அதிகாரிகள் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து ஹெலிகாப்டர், கப்பலில் 
கடலோரக் காவல்படையினர் தொடர்ந்து ரோந்து மற்றும் எண்ணெய் கசிவை அகற்றும் ஈடுபட்டு வருகின்றனர். எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு ஒன்றரை நாள்களுக்குப் பிறகே கரையை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடுக்கடலில் பரவிய எண்ணெய் படலத்தை 
இருட்டின் காரணமாக துறைமுக அதிகாரிகள் முழுமையாக அறிய முடியவில்லை. 
இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு அது தற்போது 
நடைபெற்று வரும் நிலையில் அரசு சார்ந்த இன்னொரு துறை துறைமுக நிர்வாகத்தின் மீது உண்மைக்கு மாறான தகவல்கள், புகார்களைத் தெரிவிப்பது முறையானது அல்ல எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment