Friday, 11 December 2015

திருவொற்றியூர் காவலர் குடியிருப்பில் தேங்கி நிற்கும் கழிவு நீர்


திருவொற்றியூர், டிச.9: கனமழையால் வெள்ளத்தில் சிக்கிய திருவொற்றியூர் காவலர் குடியிருப்பில்  வெள்ள நீருடன் கழிவு நீர் கலந்து வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இதனால் இங்கு வசிக்கும் காவலர்களின் குடும்பத்தினர் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். 
    திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் காவலர் குடியிருப்பு உள்ளது. கடந்த 1999-ம் ஆண்டில் ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த குடியிருப்பில் சுமார் என்பதுக்கும் மேற்பட்ட காவலர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு நீண்ட காலமாக கழிவு நீர் வெளியேறுவதில் பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழையால் இப்பகுதியை வெள்ளநீர் சூழ்ந்தது. தற்போது மழை நின்றுவிட்ட போதிலும் இங்கிருந்து கழிவு நீர் கலந்த வெள்ளநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இதனால் கடந்த 15 நாள்களாக இங்கு வசிக்கும் காவலர் குடும்பத்தினர் துர்நாற்றம், கொசு உள்ளிட்ட இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து குடியிருப்புவாசிகள் கூறுகையில், கழிவுநீரை அகற்று வேண்டும என பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. தற்போதைய சூழ்நிலையில் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை உள்ளது. இங்கு வசிக்கும் காவலங்கள் பல்வேறு பகுதிகளில் மீட்பு மற்றும் காவல் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்களின் குடும்பத்தினரே அவதிக்கு உள்ளாகி வருவது வேதனயளிக்கிறது என்றனர்.
விரைவில் தீர்வு காண உறுதி:
இப்பிரச்னை குறித்து மாநகராட்சி மண்டலக்குழு தலைவர் தனரமேஷ் கூறியது,
     இக்குடியிருப்பு தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் குழாய்கள் போதுமானதாக இல்லை. மேலும் குழாய்களில்  அடைப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்றி வருகிறோம். கழிவுநீர் அகற்றல், காவலர் வீட்டுவசதி வாரிய அதிகாரிகளின் கலந்து பேசி இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்றார் தனரமேஷ். 

No comments:

Post a Comment