Thursday, 13 October 2016

ஒருங்கிணைந்த கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை 

தமிழகம்,புதுவையில் புதன்கிழமை நடைபெறுகிறது.

திருவொற்றியூர், செப்.26:தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச பகுதிகளை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் ஒருங்கிணைந்த கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை புதன் மற்றும் வியாழக்கிழமை நடைபெறுகிறது.  
இது குறித்து இந்திய கடலோரக் காவல்படை கிழக்கு பிராந்தியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
   இந்தியக் கடலோரக் காவல்படை கிழக்கு பிராந்தியம் சார்பில் 'சாகர் கவச் (Sagar Kavach)' எனப் பெயரிடப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை புதன் மற்றும் வியாழக்கிழமை நடைபெறுகிறது. 
இதில் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒரு குழு சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு, ஊடுருவும் குழுவாகவும், மற்றொரு குழு இதனைத் தடுக்கும் பணியில் ஈடுபடவும் செய்வார்கள். இதில் ரோந்துக் கப்பல்கள், விமானங்கள், அதிவேகப் படகுகள் உள்ளிட்டவை ஈடுபடுத்தப்படும். தமிழ்நாடு, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த காவல்த்துறை, கடலோரக் காவல்படை, கடற்படை, மீன்வளத்துறை, கடல்சார் அமலாக்கத்துறை, சுங்கத்துறை, சென்னைத் துறைமுகம், கலங்கரை விளக்கங்கள், கப்பல்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் இந்த ஒத்திகையில் பங்கேற்க உள்ளனர். 
   இந்த ஒத்திகை சென்னை மற்றும் விசாகபட்டனத்தில் உள்ள கடலோரக் காவல்படை 
அலுவலகங்களிலிருந்து கண்காணிக்கப்படும். ஒத்திகையின் முடிவில் கடலோரப் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகள், பாதுகாப்பினைப் பலப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள்  உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து 
முதன்மை உள்துறை செயலாளர் தலைமையிலான குழு ஆய்வு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

No comments:

Post a Comment