Thursday, 13 October 2016

திருவொற்றியூர், செப்.24:சென்னைத் துறைமுகம் சமையல் எண்ணெயைக் கையாள்வதில் புதிய சாதனையைப் புரிந்துள்ளது.
இது குறித்து சென்னைத் துறைமுகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, 
   கடந்த செப்.19-ம் தேதி சென்னைத் துறைமுகம் வந்த எம்.டி.அஜவ் சீ என்ற கப்பலில் இருந்த 10,780 மெட்ரிக் டன் சுத்திகரிக்கப்பட்ட பனை எண்ணெய் (சமையல் எண்ணெய்) இறக்குமதி செய்யப்பட்டது. இதற்கு முன்பு 2014-ல் 8,700 மெட்ரிக் டன் கையாளப்பட்டதை அதிகபட்சமாக இருந்து வந்தது. மேலும் இக்கப்பலில் 35 ஆயிரம் மெட்ரிக் டன் எண்ணெய் ஏற்றிய எடையுடன் துறைமுகத்திற்கு வந்தது. இதற்கு முன்பு 32 ஆயிரம் மெட்ரிக் டன் எண்ணெயை ஏற்றிய கப்பலைக் கையாண்டதே சாதனை அளவாக இருந்தது. இச்சாதனை அளவினை எட்டியதற்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகள், இறக்குமதியாளர், கப்பலின் முகவர் உள்ளிட்டவர்களை துறைமுகத் தலைவர் (பொறுப்பு) சிரில் ஜார்ஜ் நேரில் அழைத்துப் பாராட்டினார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment