Thursday, 13 October 2016


திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலில் நவராத்திரி திருவிழா

திருவொற்றியூர், அக்.3:திருவொற்றியூர் தியாகராஜர் சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் 10 நாள் நவராத்திரி திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. 
     முதல்நாளான ஞாயிற்றுக்கிழமை தபசு அலங்காரம், திங்கள்-பராசக்தி, செவ்வாய்-நந்தினி, புதன்-கௌரி, வியாழன்-பத்மாவதி, வெள்ளி-உமாமகேஸ்வரி, சனி-ராஜராஜேஸ்வரி, ஞாயிற்றுகிழமை-மகிஷாசுரமர்த்தினி, திங்கள்-சரஸ்வதி, இறுதி நாளான அக்.11 செவ்வாய்க்கிழமை மீனாட்சி அலங்காரம் நடைபெற உள்ளது. இவ்விழாவினையோட்டி பல்வேறு நடனம், நாட்டியம், இசைக்கச்சேரி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் தினமும் தொடர்ந்து நடைபெற உள்ளது. விழா நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் எஸ்.சிவகுமார், செயல் அலுவலர் (பொறுப்பு) ஆர்.வான்மதி மற்றும் கோயில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment