Thursday, 13 October 2016

சுங்கத்துறை சோதனையை விரைவுபடுத்த ரூ.35 கோடியில் புதிய ஸ்கேனர் வசதி

சென்னைத் துறைமுகத்தில் அறிமுகம் 

திருவொற்றியூர், செப்.16:சுங்கத்துறை சோதனையை விரைவுபடுத்தும் வகையில் ரூ. 20 கோடி மதிப்பீட்டிலான புதிய அதிநவீன ஸ்கேனர் வசதியை சென்னைத் துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
    சென்னைத் துறைமுகத்தில் உள்ள இரண்டு சர்வதேச சரக்குப் பெட்டக முனையங்கள் மூலம் ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் கண்டெய்னர்கள் கையாளப்படுகின்றன. முனையங்களில் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் கண்டெய்னர்களில் உள்ள சரக்குகளை சோதனயிட்டு அனுமதி வழங்குது சுங்கத்துறையின் பணியாகும். ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் சுங்கத்துறை சோதனையை எளிமைப்படுத்தவும், விரைவு படுத்தவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 
ரூ.30 கோடியில் புதிய ஸ்கேனர் வசதி மற்றும் ரூ.5 கோடியில் ரேடியோ அதிர்வெண் அடையாளச் சாதன கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளை சென்னைத் துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.  இப்புதிய வசதிகளை மத்திய ஆயத்தீர்வை மற்றும் சுங்க வாரிய உறுப்பினர் (நிர்வாகம்) வனஜா என். சர்னா திறந்து வைத்தார். 
இப்புதிய வசதிகள் குறித்து சென்னை சுங்க இல்ல துணை ஆணையர் ரமேஷ் மூர்த்தி 
கூறியது,
    இப்புதிய வசதிகளை ஏற்படுத்தியன் மூலம் சுங்கத்துறை சோதனை மற்றும் ஆய்வுப் பணிகள் விரைவுபடுத்தப்படும். இதனால் ஏற்றுமதி, இறக்குமதிக்கான நேர அளவு குறையும். இதனால் ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு செலவினமும் குறையும். புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்கேனர் கருவி எக்ஸ் ரே தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கருவி மூலம் கண்டெய்னர்களுக்குள் வைக்கப்பட்டுள்ள குறைந்தபட்சம் 400 மி.மி. அளவுள்ள சரக்குக்களைக் கூட அடையாளம் காண முடியும். மணிக்கு 12 கண்டெய்னர்களை ஆய்வு செய்து சோதனையிட முடியும். தற்போது சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ள இக்கருவி இன்னும் ஒரு மாதத்திற்குள் முழு வீச்சில் செயல்படும். 
   தேசிய சரக்குப் பெட்டக நிலையங்களின் கூட்டமைப்பு உதவியுடன் செயல்படுத்தப்படும் ரேடியோ அதிர்வெண் அடையாளச் சாதனக் கட்டமைப்பு வசதிகள்  சென்னைத் துறைமுகத்தையும், இதன் அருகாமையில் அமைந்துள்ள முப்பதுக்கும் மேற்பட்ட சரக்குப் பெட்டக நிலையங்களையும் தகவல் தொழில்நுட்பம் மூலம் ஒருங்கிணைக்கப்படும். இதனால் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் சோதனையிடும் பணிகள் இனி ஒரு சில நிமிடங்களில் நிறைவு பெறும். இதனால் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் விரைவாக நடைபெறும் என்றார் ரமேஷ்.
   இந்நிகழ்ச்சியில் சென்னைத் சுங்கத்துறை தலைமை ஆணையர் பி.கே.தாஸ், ஆணையர் பி.கே.பெஹ்ரா, இணை ஆணையர் கே.கே.சுஜா, சரக்குப் பெட்டக நிலையங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் அருண், பத்மநாபன், ரகுசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment