Thursday, 13 October 2016

சாலைத் தடுப்புச் சுவரில் மோதி வியாபாரி சாவு

திருவொற்றியூர், செப்.25:எண்ணூர் விரைவு சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கோழி வியாபாரி நந்தகோபால் (23) ஞாயிற்றுக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார்.
   சென்னை வண்ணாரப்பேட்டை காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மகன் நந்தகோபால். திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் கோழிக்கடை வைத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு கோழிக்கடை வியாபாரத்தை முடித்த நந்தகோபால் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது எண்ணூர் விரைவு சாலையில் ஒண்டிக்குப்பம் அருகே சென்றபோது நிலைதடுமாறி சாலைத் தடுப்புச் சுவரில் மோதியுள்ளார். இதில் தலையில்  பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
   இது குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து 

No comments:

Post a Comment