Thursday, 13 October 2016

மணலியில் கறிக்கடை ஊழியர் கொலை

பால் வியாபாரி கைது

திருவொற்றியூர், செப்.26:மணலியில் கறிக்கடை ஊழியர் சேகர் (27) கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய பால் வியாபாரி அருண் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
   சென்னை மணலி லால்பகதூர் சாஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் நாகூர்மீரான். இவர் காமராஜர் சாலையில் கறிக்கடை நடத்தி வருகிறார். இங்கு அம்பத்தூர் பாடியைச் சேர்ந்த சேகர் என்பவர் வேலை செய்து வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு இறைச்சிக் கடைக்கு வந்த அருண், சேகரிடன் கறி வாங்கிக் கொண்டு பணம் தரவில்லையாம். மேலும் வாக்குவாதம் ஏற்பட்டு திடீரென உருட்டுக் கட்டையால் சேகரைத் தாக்கியுள்ளார் அருண். இதில் தலையில் பலத்த காயமடைந்த சேகர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சேகர் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார்.
   இது குறித்து வழக்குப் பதிவு செய்த மணலி காவல் நிலைய போலீஸார் சேகரைத் தாக்கிய அருணை திங்கள்கிழமை கைது செய்து திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவரை பதினைந்து நாள் நீதிமன்றக் காவலில் வைக்க திருவொற்றியூர் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி வசந்தக்குமார் உத்தரவிட்டார். இதனையடுத்து அருண் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

No comments:

Post a Comment