Thursday, 13 October 2016

பத்திரிகையாளர் மீது தாக்குதலைக் கண்டித்து சாலை மறியல் 

திருவொற்றியூர், அக்.3:மணலியில் பத்திரிகை போட்டோகிராபரைத் தாக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டரைக் கண்டித்து பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் திங்கள்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
   தீக்கதிர் பத்திரிகையின் வடசென்னை பகுதி போட்டோகிராபராக இருப்பவர் ஜாபர் (40).
திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் என்பதால் மக்கள் நல கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் திரளாக மனுத்தாக்கல் செய்தனர். இதனை படம் பிடிப்பதற்காக ஜாபர் மணலி மண்டல அலுவலம் உள்ளே சென்றுள்ளார். அப்போது அவரை போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர் பத்திரிகை அடையாள அட்டையை எடுத்து ஜாபர் காட்டியுள்ளார். இருப்பினும் ஜாபரை போலீஸார் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனையடுத்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது 
அங்கு பணியில் இருந்த போலீஸ் இன்பெக்டர்கள்  சரவணன், ஜீவக்குமார், காவலர் சசிக்குமார் ஆகியோர் ஜாபரை பலமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கு வந்த பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
இது குறித்து தகவல் அறிந்த மாதவரம் காவல்த்துறை துணை ஆணையர் ராஜேந்திரன் 
அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தார். மேலும் ஜாபர் அளித்துள்ள புகாரின் பேரில் போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் 
என உறுதி அளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது. 

No comments:

Post a Comment