திருவொற்றியூர்,ஜூன் 5:எங்களது மது ஒழிப்புக் கொள்கையை 'டிராபிக்' ராமசாமி ஏற்றுக் கொண்டு உறுதியளித்தால் மட்டுமே நான் போட்டியிலிருந்து விலகி அவருக்கு ஆதரவளிப்பேன் என மது ஒழிப்பு பிரச்சாரம் செய்து வரும் சசிபெருமாள் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்வதற்காாக சசிபெருமாள் தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை வந்தார்.
அப்போது சசிபெருமாள் தினமணி நிருபருக்கு அளித்த பேட்டி:
முதல்வர் ஜெயலலிதா வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்காக வந்ததையொட்டி
இப்பகுதியே ஸ்தம்பித்துவிட்டது. மேலும் பல முனைகளிலும் தடுப்பு அமைக்கப்பட்டு இருந்ததால் என்னால் குறித்த நேரத்திற்கு வர இயலவில்லை. மேலும் பிற்பகல் 3 மணியாகிவிட்டதால் வேட்பு மனுவை வாங்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். நாளை எனது மனுவைத் தாக்கல் செய்வேன். 'டிராபிக்' ராமசாமிக்கு ஆதரவளிப்பதாக முன்பு அறிவித்தது உண்மைதான். ஆனால் அவரது மனு பரிசீலனையின் போது ஏற்றுக் கொள்ளப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியலில் இடம் பெற வேண்டும். மேலும் அவர் எங்கள் அமைப்பின் கொள்கையான மது ஒழிப்புக்கு முன்னுரிமை கொடுப்பதாக உறுதி அளிக்கக் வேண்டும். அப்போதுதான் எனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டு
'டிராபிக்' ராமசாமிக்கு ஆதரவளிப்பேன். 2016 பொதுத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் மது ஒழிப்பு வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார். அதற்கு ஒரு முன்னோட்டம்தான் இந்த இடைத்தேர்தல் என்றார் சசிபெருமாள்.
No comments:
Post a Comment