சென்னைத் துறைமுகத்தில் ரூ.1.15 கோடியில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள்
துறைமுகத்தலைவர் எம்.ஏ.பாஸ்கராச்சார் தொடங்கி வைத்தார்
திருவொற்றியூர்,ஜன.29:சென்னைத் துறைமுகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன ரக கண்காணிப்பு கேமராக்களை துறைமுகத்தலைவர் எம்.ஏ.பாஸ்கராச்சார் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
சென்னைத் துறைமுகத்தில் தற்போது 10 வாயில்கள் செயல்பாட்டில் உள்ளன. வாயில்கள் மற்றும் துறைமுகத்தின் முக்கிய இடங்களில் ஐ.பி. தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்பட்டு இயங்கி வந்தன. இவை 2006-ம் ஆண்டில் தொடங்கப்பட்டவை என்பதால் அடிக்கடி பழுதடைந்து விடுவதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து புதிய தொழில்நுட்பத்துடன் (HD PTZ CCTV) கூடிய 30 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் அடங்கிய புதிய கட்டமைப்பு ரூ.1.15 கோடி செலவில்
அமைக்கப்பட்டுள்ளது. இதனை வெள்ளிக்கிழமை துறைமுகத் தலைவர் எம்.ஏ.பாஸ்கராச்சார் தொடங்கி வைத்தார். புதிய கட்டமைப்புடன் பழைய கேமராக்கள் இணைக்கப்படும் எனவும், இதனை தொழில்பாதுகாப்புப் படை கண்காணிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் துறைமுகத் துணைத் தலைவர் சிரில் ஜார்ஜ் மற்றும் துறை தலைவர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment