திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயில் தைப்பூச தெப்பத் திருவிழா
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
திருவொற்றியூர், ஜன.24:திருவொற்றியூர் தியாகராஜசுவாமி தைப்பூச தெப்பத் திருவிழா 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
திருவொற்றியூர் தியாகராஜசுவாமி திருக்கோயில் தமிழகத்தின் பழமையான கோயில்களில் ஒன்றாகும். இக்கோயிலில் கடந்த 2006-ம் ஆண்டில் தெப்பத்திருவிழா நடைபெற்றது. மேலும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குடமுழுக்குவும், கடந்த டிசம்பர் மாதம் புதிதாக அமைக்கப்பட்ட தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றன. இந்நிலையில் தைப்பூசத்தையொட்டி தெப்பத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பம் திருக்குளத்தில் உலா வந்தது. இதில் உற்சவரான சந்திரசேகரசுவாமி வீற்றிருக்க திருக்குளத்தில் நான்கு பக்கமும் தெப்பம் சுற்றி வந்தது. இதனை நான்கு புறமும் குளக்கரையில் அமர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பார்த்து வணங்கினர். மூன்று முறை சுற்றி வந்த தெப்பம்
பின்னர் நிலை நிறுத்தப்பட்டது. திங்கள், செவ்வாய்க்கிழமை மாலை இதே போல் தொடர்ந்து தெப்பம் உலா வரும் பக்தர்கள் பார்த்து மகிழலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.குப்பன், அறநிலையத்துறை சென்னை மண்டல இணை ஆணையர் தி.பரஞ்ஜோதி,
கோயில் செயல் அலுவலர் ந.லதா பங்கேற்றனர். விழாவினையொட்டி
பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளை
அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் செய்திருந்தனர்.
திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து தெப்பம் தத் திருவிழா நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வதால் போலீஸார்
பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். மேலும் தெப்பத்திருவிழாவிற்கான விரிவான
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ந.லதா தலைமையில் அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

No comments:
Post a Comment