Monday, 25 January 2016

திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயில் தைப்பூச தெப்பத் திருவிழா

10 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை நடைபெறுகிறது

திருவொற்றியூர், ஜன.22:திருவொற்றியூர் தியாகராஜசுவாமி தைப்பூச தெப்பத் திருவிழா 10 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. 
    திருவொற்றியூர் தியாகராஜசுவாமி திருக்கோயில் தமிழகத்தின் பழமையான கோயில்களில் ஒன்றாகும். இக்கோயிலில் கடந்த 2006-ம் ஆண்டில் தெப்பத்திருவிழா நடைபெற்றது. மேலும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குடமுழுக்கு நடைபெற்றது. கடந்த டிசம்பர் மாதம் புதிதாக அமைக்கப்பட்ட தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் தைப்பூச தெப்பத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. 
 இதன்படி  தெப்பத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இதேபோல் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து தெப்பத் திருவிழா நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வதால் போலீஸார் 
பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். மேலும் தெப்பத்திருவிழாவிற்கான விரிவான
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ந.லதா தலைமையில் அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். 

No comments:

Post a Comment