எண்ணூரில் தற்கொலை செய்து கொண்ட பெண்கள் அடையாளம் காணப்பட்டது
திருவொற்றியூர், நவ.12: எண்ணூரில் வெள்ளிக்கிழமை கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டு இறந்து போன இரண்டு பெண்கள் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த மோகனா (55),இவரது மகள் கலைவாணி (26) என்பது தெரியவந்துள்ளது.
எண்ணூர் தாழங்குப்பம் அருகே கடலில் வெள்ளிக்கிழமை பிற்பகல் இரு பெண்கள் கடலில் மூழ்கியதாகத் தகவல் பரவியது. இதனையடுத்து அருகில் வசித்த மீனவர்கள் கடலில் இறங்கி தேடினர். அப்போது இரு பெண்களின் சடலங்களையும் மீட்கப்பட்டன. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த எண்ணூர் போலீஸார் அவர்கள் யார் என அடையாளம் தெரியாத நிலையில் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த எண்ணூர் காவல் நிலைய போலீஸார் இறந்து போனவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் இறந்துபோனவர்கள் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த மோகனா, இவரது மகள் கலைவாணி என்பது தெரிய வந்தது. கலைவாணி பொன்னேரி அருகே உள்ள மேட்டுப்பாளையம் வன்னிவாக்கம் ஊரில் கார்த்திக் என்பவருக்கு
திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், குடும்பப் பிரச்னை காரணமாகத் தற்கொலை செய்து கொண்டிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு இருவரது சடலங்களையும் உறவினர்களிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.
இது குறித்து எண்ணூர் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment