திருவொற்றியூர் பெயிண்டர் கொலை வழக்கில் 3 பேர் கைது
திருவொற்றியூர், நவ.12:திருவொற்றியூரில் டேவிட் என்ற பெயிண்டர் கடந்த வியாழக்கிழமை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ரமேஷ் (29), அன்புச்செல்வன் (23), அருள் (24) ஆகிய மூவரையும் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
திருவொற்றியூர் மேற்கு பகுதியில் உள்ள ராஜாஜி நகரைச் சேர்ந்த பெயிண்டர் டேவிட் (23) என்பவர் கடந்த வியாழக்கிழமை திருவொற்றியூர்-மணலி சாலையில் உள்ள கரிமேடு பகுதியில் பாழடைந்த கட்டடம் ஒன்றில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இக்கொலையில் தொடர்புடைய ராஜாஜி நகரைச் சேர்ந்த ரமேஷ், தண்டையார்பேட்டை இந்திரா நகரைச் சேர்ந்த அன்புச் செல்வன், இதே பகுதியைச் சேர்ந்த அருள் ஆகிய மூவரையும் கைது செய்தனர். மேலும் இதே வழக்கில் முக்கியக் குற்றவாளியாகச் செயல்பட்ட சரவணன் என்பவன் தலைமறைவாகிவிட்டார். சரவணனைத் தேடும் பணியில் போலீஸாார் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். ரமேஷ் மனைவி குறித்து டேவிட் அவமரியாதையாகப் பேசி வந்ததே கொலைக்காண காரணம் என்பதும், சரவணனுக்கும், டேவிட்டுக்கும் இருந்து வந்த முன் விரோதம் போன்றவையே கொலைக்கான காரணம் என் போலீஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் சனிக்கிழமை திருவொற்றியூர் குற்றவியல் நடுவர் எம்.வசந்தகுமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் மூவரையும் பதினைந்து நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதையடுத்து மூவரும்
புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். ஒரே நாளில் கொலையாளிகள் கைது செய்யப்பட்டதற்காக திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் பிரகாஷ், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
No comments:
Post a Comment