திருவொற்றியூர் மேற்கு பகுதியில் குழாய் மூலம் குடிநீர்
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.குப்பன் தொடங்கி வைத்தார்
திருவொற்றியூர்,நவ.12:திருவொற் றியூர் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பதினைந்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் பணியை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் கே.குப்பன் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
திருவொற்றியூர் மேற்கு பகுதியில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன. இதில் சில பகுதிகளில் ஏற்கனவே அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் பழுதடைந்துவிட்டன. மேலும் இப்பகுதியில் லாரிகள் மூலம்தான் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவொற்றியூர் மேற்கு பகுதியில் ஏழாவது வார்டுக்கு உட்பட்ட பாலகிருஷ்ணா நகர், சரவணா நகர், சார்லஸ் நகர், கார்கில் நகர், ராஜாஜி நகர் உள்ளிட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் புதிதாக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழாய்களுக்கு மணலியில் உள்ள நீரேற்று நிலையத்திலிருந்து இணைப்புகள் தரப்பட்டுள்ளன. சனிக்கிழமை சுமார் 16 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பொதுக் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கும் பணியை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் கே.குப்பன் தொடங்கி வைத்தார். மேலும் சுமார் 300 வீடுகளுக்கு தனி இணைப்பு வழங்குவதற்கான விண்ணப்பப் படிவத்தையும் அவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை குடிநீர் வாரிய பகுதி பொறியாளர் உலகநாதன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் என். கலையரசன், வட்டச் செயலாளர் கண்ணன் மற்றும் கிராம நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment