Thursday, 17 November 2016

ஓய்வூதியச் சலுகைகளை உடனே வழங்க வேண்டும்

மின்வாரிய ஓய்வூதியதாரர்கள் ஆர்ப்பாட்டம்

திருவொற்றியூர், நவ.8:தமிழ்நாடு மின்சார வாரியத்திலிருந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை உடனடியாக அமல்படுத்தக் கோரி திருவொற்றியூர் மின்வாரிய அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கூறியது, 
மின்வாரிய ஓய்வூதியதாரர்களுக்கு அரசு உத்தரவாதத்துடன் கூடிய ஓய்வூதியத்தை 
தொடர்ந்து வழங்க வேண்டும், ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும், மின்வாரிய கூட்டுறவு சங்கங்களின் மூலம் பணியாற்றிவர்களுக்கு அவர்களின் பணிகாலம் முழுவதையும் கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
ஓய்வூதியதாரர்களுக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றனர்.
  தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியதாரர்கள் நல அமைப்பு மாநிலச் செயலாளர் கே.ஆர்.முத்துச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யூ. நிர்வாகிகள் ஆர்.ஜெயராமன், வெங்கட்டையா மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment