முதல்வர் குறித்து தரக்குறைவாகப் பேசியதாக
நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது
திருவொற்றியூர், அக்.17:எண்ணூர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா குறித்து தரக்குறைவாகப் பேசியதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி மாரிமுத்துவை (27) திங்கள்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை எண்ணூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு நபர்கள் பேசிய நிலையில் இக்கட்சியின் திருவொற்றியூர் தொகுதி கொள்கை பரப்புச் செயலாளர் மாரிமுத்து பேசியுள்ளார். அப்போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க.வினர் பொதுக்கூட்ட மேடைக்கு வந்து தகராறில் ஈடுபட்டள்ளனர். இதனையடுத்து பொதுக்கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து அ.தி.மு.க.வினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய எண்ணூர் காவல் போலீஸார் மாரிமுத்துவை திங்கள்கிழமை கைது செய்தனர். பின்னர் திருவொற்றியூர் குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். இதனையடுத்து மாரிமுத்துவை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
No comments:
Post a Comment