எண்ணூரில் மர்மக் காய்ச்சலால் குழந்தை சாவு
திருவொற்றியூர், அக்.15:எண்ணூரில் மர்மக் காய்ச்சலால் எண்ணூரில் தர்ஷினி (7) என்ற பள்ளிக் குழந்தை வெள்ளிக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தது.
எண்ணூர் சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் தாமோதரன். இவரது மனைவி மதிவாணி. சுயதொழில் செய்து வரும் தாமோதரன் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட அளவில் நிர்வாகியாக உள்ளார். இவர்களுக்கு சாருமதி, தர்ஷினி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். தர்ஷிணி அருகிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை தர்ஷினிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு தர்ஷினியை அழைத்துச் சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். ஆனால் வெள்ளிக்கிழமையும் காய்ச்சல் குறையவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் தொடர்ச்சியாக வாந்தி எடுத்ததைத் தொடர்ந்து தர்ஷினி மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தர்ஷினியைக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் தர்ஷினியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து போய்விட்டதாகத் தெரிவி்த்துள்ளனர்.
சனிக்கிழமை தாமோதரனின் வீட்டிற்கு வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தர்ஷினியின் மரணம் குறித்து துக்கம் விசாரித்தார்.
காய்ச்சல் ஏற்பட்டு இரண்டே நாள்களில் தர்ஷினி இறந்து போன சம்பவம்
தர்ஷினியின் பெற்றோர் மற்றும் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
No comments:
Post a Comment