Monday, 14 March 2016

திருவொற்றியூர் தியாகராஜர் கோயில் மாசி பிரமோற்சவத் திருவிழா 

கல்யாணசுந்தரர்-சங்கிலி நாச்சியார் திருக்கல்யாணம் 

திருவொற்றியூர்,பிப்.21:மாசி பிரமோற்சவத் திருவிழாவினையொட்டி திருவொற்றியூர் தியாகராஜர் உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் கல்யாணசுந்தரர்-சங்கிலிநாச்சியார் திருக்கல்யாண நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
     திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலில் மாசி பிரமோற்சவத் திருவிழா கடந்த பிப்.13 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவினையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. 75 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு தேரோட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கல்யாணசுந்தரர்-சங்கிலிநாச்சியார் திருக்கல்யாணம் 
நடைபெற்றது. இதனையொட்டி கோயில் வளாகம் முழுதும் பக்தர்களால் நிரம்பி வழிந்தது. பிற்பகல் மகிழடி சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் 63 நாயன்மார்கள் நான்கு மாடவீதிகளிலும் திருஉலா நிகழ்ச்சி நடைபெற்றது.
   மாசி பிரமோற்சவத்தையொட்டி தெற்கு மாடவீதியில் அமைந்துள்ள  நாட்டுக்கோட்டை செட்டியார்கள் சத்திரத்தில் தொடர் அன்னாதான நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. திருவிழாவினையொட்டி நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment