Monday, 14 March 2016

எண்ணூரில் குளத்தில் தவறி விழுந்து இரண்டரை வயது குழந்தை சாவு

திருவொற்றியூர், பிப்.29:எண்ணூரில் மாநகராட்சி குளத்தில் தவறி விழுந்த ஜோஸ்வா என்ற இரண்டரை வயது குழந்தை திங்கள்கிழமை பரிதாபமாக உயிரிழந்தது.
    எண்ணூர் வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் சதீஷ். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது இரண்டரை வயது பெண் குழந்தை ஜோஸ்வா. இதே பகுதியில் சென்னை மாநகராட்சியின் பராமரிப்பில் தாமரைக்குளம் உள்ளது. இக்குளத்தின் கரையில் திங்கள்கிழமை குழந்தை ஜோஸ்வா விளையாடியுள்ளது. அப்போது குளத்தில் தவறி விழுந்த குழந்தை பரிதாபமாக இறந்தபோனது.
   இது குறித்து எண்ணூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

No comments:

Post a Comment