Friday, 24 June 2016

திருவொற்றியூரில் தீ விபத்து: ரூ.1 லட்சம் சேதம்

திருவொற்றியூர், ஜூன் 21:திருவொற்றியூரில் செவ்வாய்க்கிழமை வணிகக் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 1 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமாயின. 
 திருவொற்றியூர் ராஜாகடை பகுதியில் ஸ்ரீதர் என்பவருக்குச் சொந்தமான வணிகக் கடை உள்ளது. இங்கு வளர்ப்பு பிராணிகளுக்கான அனைத்து வகை உணவுப் பொருள்கள், மருந்து வகைகள், இதர அலங்கார பொருள்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இக்கடையின் ஒரு பகுதியில் செவ்வாய்க்கிழம் நண்பகல் திடீரென தீப்பிடித்தது. இதனையடுத்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் உடனடியாக வந்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இதில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட சோதனையில் தெரிய வந்துள்ளது.
   இதி குறித்து திருவொற்றியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

No comments:

Post a Comment