Thursday, 5 May 2016


கிழக்கு கடலோரக் காவல் படை தளபதிக்கு பிரிவு உபசார விழா

கப்பல்கள் அணிவகுக்க நடுக்கடலில் நடைபெற்றது

திருவொற்றியூர், ஏப்.27:இந்திய கடலோரக் காவல் படை கிழக்கு பிராந்திய தளபதி சத்ய பிரகாஷ் சர்மா வரும் ஏப்.30 தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதனையொட்டி பிரிவு உபசார விழா சென்னைக்கு அருகே நடுக்கடலில் புதன்கிழமை நடைபெற்றது.
   இந்தியக் கடலோரக் காவல்படையின் கிழக்குப் பிராந்திய தலைமை அலுவலகம் சென்னையில் இயங்கி வருகிறது. முன்பு தமிழ்நாடு முதல் மேற்கு வங்க மாநிலம் வரை விரிந்திருந்த இப்பிரிவு தற்போது ஆந்திரமாநிலம்வரை நீடிக்கிறது. இப்பிரிவின் தளபதிதாக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த சத்ய பிரகாஷ் வரும் சனிக்கிழமையுடன் ஓய்வு பெறுகிறார். இதனையொட்டி பிரிவு உபசார விழா சென்னைக்கு அருகே நடுக்கடலில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் கடலோரக் காவல்படையின் 9 ரோந்துக் கப்பல்கள், இரண்டு ரோந்து விமானங்கள், ஒரு ஹெலிகாப்டர் பங்கேற்றன. அப்போது கடலோரக் காவல்படையின் வழக்கமான 
பணிகள் குறித்த செயல் விளக்க காட்சிகள் நடைபெற்றன. பின்னர் கப்பல்கள் அணி வகுக்க தளபதி சர்மாவுக்கு வீரர்கள் வணக்கம் தெரிவித்து பிரியாவிடை அளித்தனர்.
36 ஆண்டுகளாக பணியாற்றியது பெருமை:
இந்நிகழ்ச்சியில் எஸ்.பி.சர்மா செய்தியாளர்களிடம் கூறியது,
   இந்திய கடலோரக்காவல்படையில் 36 ஆண்டுகள் இடைவிடாது பணியாற்றி உள்ளேன். இதில் கிழக்கு பிராந்தியத்தில் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியது பெருமையாக உள்ளது. என்னுடைய பணிகாலத்தில் அனைத்து மாநில அரசு நிர்வாகங்கள் இணக்கமாகவே செயல்பட்டுள்ளன. தற்போது இப்பிராந்தியத்தில் 33 ரோந்துக் கப்பல்கள், 4 ரோந்து விமானங்கள், 3 ஹெலிகாப்டர்கள் உள்ளன. மாநில அரசுகளின் உதவியுடன் தளங்கள் அமைக்க தூத்துக்குடியின் 50 ஏக்கர், புதுச்சேரியில் 5 ஏக்கர், கிருஷ்ணபட்டனத்தில் 20 ஏக்கர், விசாகபட்டனத்தில் 5 ஏக்கர் நிலங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் சென்னைத் துறைமுகத்தையொட்டி எட்டு அடுக்குகள் கொண்ட கட்டடம் விரைவில் கட்டப்பட உள்ளது. 
     கடலோரக்காவல்படை என்பது வெறும் ரோந்துப் பணி மட்டுமல்ல. நாட்டின் பொருளாதார உறுதித் தன்மையைப் பாதுக்காப்பது உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாயந்த பல்வேறு முக்கிய பணிகளில் இப்படையினர் ஈடுபட்டு வருகினர். இதில் 
சேறுவதற்கு இளைஞர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் சர்மா.

No comments:

Post a Comment