சிங்காரச் சென்னை தற்போது சீரழிந்த சென்னையாக மாறிவிட்டது
மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
திருவொற்றியூர், ஏப்.28:சிங்காரச் சென்னை தற்போது சீரழிந்த சென்னையாக மாறிப்போய்விட்டது. இதற்கு காரணம் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிதான் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை குற்றம் சாட்டினார்.
வடசென்னையில் ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.மனோ, திமுக வேட்பாளர்கள் ஆர்.கே.நகர் - சிம்லா முத்துச் சோழன், திருவொற்றியூர்- கே.பி.பி.சாமி, மாதவரம்-எஸ்.சுதர்சனம் உள்ளிட்டோரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் வேனில் இருந்தபடியே வியாழக்கிழமை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது திருவொற்றியூரில் ஸ்டாலின் பேசியது,
ஜெயலலிதா முதல்வராகப் பதவியில் இருந்த கடந்த ஐந்து ஆண்டுகளில் எப்போதாவது மாவட்டத் தலைநகரங்களுக்கோ அல்லது முக்கிய நகரங்களுக்கோ சென்று மக்களை நேரடியாகச் சந்தித்தது உண்டா? தேர்தலின் போது மட்டுமே மக்களைச் சந்திப்பவர்தான் ஜெயலலிதா. ஆனால் கடந்த முறை சென்னை மாநகரம் வெள்ளத்தில் சிக்கியபோது பதவியில் இல்லாத போதும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டவர் கருணாநிதி. நீலகிரி மாவட்டத்திற்கு மட்டும் ஜெயலலிதா செல்வது அவரது பண்ணை வீடு, தேயிலைத் தோட்டங்களைப் பார்வையிடுவதற்குதானே ஒழிய மக்களைச் சந்திக்க அல்ல.
திமுக ஆட்சியில் கட்டப்பட்ட மிகச் சிறந்த அண்ணா நூலகத்தை மூடினார், எழில் நிறைந்த செம்மொழிப் பூங்காவை சீர்குழைத்தார், மாநகரப் போக்குவரத்து நெரிசலை வெகுவாகக் குறைக்கும் மதுரவாய
No comments:
Post a Comment