Thursday, 19 May 2016

ரூ.350-க்கு சீன நாட்டின் அலைபேசிதான் தருவார் ஜெயலலிதா 

நடிகை குஷ்பு பிரச்சாரம்

திருவொற்றியூர், மே 6:அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா அனைத்து குடும்பங்களுக்கும் அலைபேசி தருவதாகக் கூறியுள்ளார். இதன்படி ரூ. 350 மதிப்புள்ள சீன நாட்டில் தயாரிக்கப்பட்ட அலைபேசிதான் தருவார். இதன்மூலம் யாருக்கு லாபம் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு வெள்ளிக்கிழமை சென்னையில் தெரிவித்தார்.
   ராயபுரம் தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராயபுரம் ஆர்.மனோவை ஆதரித்து நடிகை குஷ்பு ராயபுரம் தொகுதிக்குட்பட்ட படவேட்டம்மன் தெரு, கெனால் தெரு, மூலக்கொத்தளம், எம்.எஸ்.நகர், போஜராஜநகர் உள்ளிட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை வீதிவீதியாக வேனில் சென்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது குஷ்பு பேசியது,
   மக்களைக் குழப்ப வேண்டும், ஏமாற்ற வேண்டும் என திட்டமிட்டுத்தான் 
மிகுந்த காலதாமதத்திற்குப் பிறகு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்
ஜெயலலிதா. இதில் பல அம்சங்கள் தி.மு.க. தேர்தல் அறிக்கையை பிரதி எடுத்தது போல்தான் உள்ளன. இலவசமாக மொபைல் போன் தருவோம் எனக் கூறியுள்ளார். ரூ.350-க்கு சீன நாட்டில் தயாரிக்கப்பட்ட மொபைல் போன்தான் வாங்கித் தருவார்.
இதனை ஈடுகட்ட ஆயிரம் ரூபாய்க்கு மதுவிற்பனை வருவாயை அதிகரிப்பார். இவ்வளவு இலவசத் திட்டங்களை அறிவித்துள்ள ஜெயலலிதா மதுவிலக்கைக் கொண்டு வர மாட்டார்.  எனவே மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது ஓடி வந்து உதவிகளைச் செய்த மனோவிற்கு வாக்களியுங்கள் என்றார் குஷ்பு
   பிரச்சாரத்தின்போது திமுக நிர்வாகிகள் ந.மனோகரன், வ.பெ.சுரேஷ்,  கட்பீஸ் பழனி காங்கிரஸ் நிர்வாகிகள் கண்ணன்,ரூப்சந்தர், கிருஷ்ணதாஸ், வெங்கடேசன் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment