Thursday, 5 May 2016

திருவொற்றியூர் தெப்பக்குளம் தண்ணீர் வற்றியது

மீன்கள் சிறிய குளத்திற்கு மாற்றம்

திருவொற்றியூர், ஏப்.4:திருவொற்றியூர் தெப்பக்குளம் வரண்டு போனதையடுத்து இக்குளத்தில் இருந்த மீன்கள் கோயிலின் உள்ளே அமைந்துள்ள சிறிய குளத்திற்கு மாற்றும் பணியில் கோயில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
   திருவொற்றியூர் தியாகராஜர் உடனுறை வடிவுடையம்மன் கோயில் தமிழகத்தின் பழமையான கோயில்களில் ஒன்று. இக்கோயிலின் வடகிழக்கில் பெரிய தெப்பக்குளம் உள்ளது. இக்குளத்திற்கு மழைநீர் வரும் பெரும்பாலான வழிகள் அடைத்துப் போய்விட்டன. இதனைச் சீரமைக்கும் பணிகள் பலமுறை நடைபெற்று வந்தாலும் 
போதிய தண்ணீர் வரத்து இல்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த 
கனமழையிலும் குளம் முற்றிலுமாக நிரம்பவில்லை. இருப்பினும் சில சுமார் 8 அடி ஆழத்திற்கு மழைநீர் நிரம்பியிருந்தது. இதில் சிலர் மீன் குஞ்சுகளை விட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது தண்ணீர் வற்றிவிட்டதால் கடும் வெயிலைச் சமாளிக்க முடியாத நிலை மீன்கள் செத்துமடியும் அபாயம் ஏற்பட்டது. இதனையடுத்து தெப்பக்குளத்தில் இருந்த மீன்கள் வலைமூலம் பிடிக்கப்பட்டு அவற்றை கோயிலின் உள் வளாகத்தில் உள்ள சிறிய குளத்தில் விட்டனர். இதனால் மீன்கள் செத்துப் போய்
துர்நாற்றம் வீசுவது தடுக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளே உள்ள குளத்திலும் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருவதால் விரைவில் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து குளத்தை நிரப்ப உள்ளதாக கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment