ராயபுரம் மனோவை ஆதரித்து குமரி அனந்தன் பிரச்சாரம்
திருவொற்றியூர்,மே4:ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராயபுரம் ஆர்.மனோவை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமரி்அனந்தன் புதன்கிழமை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ராயபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டதையடுத்து
இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வடசென்னை மாவட்டத் தலைவர் ஆர்.மனோ போட்டியிடுகிறார். மனோவை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,தேசிய செயலாளர் திருநாவுக்கரசர், செய்தி தொடர்பாளர் குஷ்பு, முன்னாள் எம்.பி. ராணி உள்ளிட்டோர் ஏற்கனவே பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன் புதன்கிழமை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது குமரிஅனந்தன் பேசியது,
நீண்ட வரலாறு கொண்ட காங்கிரஸ் கட்சி இந்நாட்டிற்கு தொடர்து தொண்டாற்றி வருகிறது. இதேபோல் வடசென்னையில் பல்வேறு சமூக நலப் பணிகளில் மனோ தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவரின் தன்னலமில்லாத மக்கள் சேவைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இத்தேர்தலில் வெற்றியடையச் செய்ய வேண்டும். இதன் மூலம் தொடர்ந்து மக்கள் நலத் திட்டப் பணிகளில் மனோ ஈடுபடுவார். மேலும் கருணாநிதி ஆறாவது முறையாக தமிழக முதலமைச்சராக பதவி ஏற்பது உறுதி என்றார் அனந்தன்.
பிரச்சாரத்தின்போது முன்னாள் எம்.எல்.ஏ மதிவானன், திமுக பகுதி செயலாளர் கட்பீஸ் பழனி, இளைய அருணா, ஜெயபால், காங்கிரஸ் நிர்வாகிகள் எர்னாஸ்ட்பால், சபரிநாதன், தொகுதி செயலாளர் ரூப்சந்தர், கிருஷ்ணதாஸ் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
No comments:
Post a Comment