Wednesday, 15 April 2015

எல்.ஐ.சி. திருவொற்றியூர் கிளைக்கு ரூ.15 கோடியில் புதிய கட்டடம்

தென் மண்டல மேலாளர் டி.சித்தார்த்தன் அடிக்கல் நாட்டினார்

திருவொற்றியூர், ஏப்.10:ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்.ஐ.சி) திருவொற்றியூர் கிளைக்கு ரூ. 15 கோடியில் கட்டடம் கட்டுவதற்கான பணிகளை இதன் தென்மண்டல மேலாளர் டி. சித்தார்த்தன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
   தென் மண்டலத்தில் உள்ள எல்.ஐ.சி. கிளைகளில் திருவொற்றியூர் கிளை நீண்ட நாள்களாக திருவொற்றியூர் காலடிபேட்டையில் தனியார் கட்டடம் ஒன்றில் வாடகையில் செயல்பட்டு வருகிறது. இக்கிளையை சொந்தக் கட்டடத்திற்கு மாற்ற முடிவு செய்த எல்.ஐ.சி. நிர்வாகம் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் புதுவண்ணாரப்பேட்டையில் பகுதியில் தனியாரிடமிருந்து இடத்தை வாங்கியது. இந்நிலையில் வாங்கப்பட்ட இடத்தில் ரூ.15 கோடியில் ஐந்தடுக்கு கொண்ட பிரமாண்ட கட்டடத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட எல்.ஐ.சி.யின் தென் மண்டல மேலாளர் டி.சித்தார்த்தன் அடிக்கல் நாட்டி கட்டடம் கட்டும் பணியைத் தொடங்கி வைத்தார். 
அப்போது செய்தியாளர்களிடம் சித்தார்த்தன் கூறியது,
    சென்னையில் எல்.ஐ.சி.க்கென தனியாரிடமிருந்து இடத்தை விலைக்கு வாங்கி 
கட்டடம் கட்டுவது இதுவே முதல்முறை. வணிக நோக்கில் ஐந்து அடுக்கில் அமைய உள்ள இக்கட்டடத்தில் முதல் தளத்தில் 5 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மட்டும் திருவொற்றியூர் கிளை செயல்படும். மீதம் உள்ள அனைத்து தளங்களும் வாடகைக்கு 
விடப்படும். எல்.ஐ.சி. சார்பில் பல்வேறு புதிய பாலிசிகளை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. முந்தைய ஆண்டைவிட கடந்த ஆண்டு காப்பீட்டு தவணைத் தொகையை கூடுதலாக வசூலித்துள்ளோம் என்றார் சித்தார்த்தன்.
     நிகழ்ச்சியில் எல்.ஐ.சி. தென் மண்டல தலைமைப் பொறியாளர் சி.ஹரிகரன், பிராந்திய மேலாளர் கே.ராஜீவன் நாயர், வணிக மேலாளர் வியாகுலசாமி, கிளை மேலாளர் உதுப் ஜோசப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment