Thursday, 8 November 2012

தானாகவே இணைப்பு துண்டிக்கப்படும் அலைபேசிகள்


திருவொற்றியூர், நவ.8:சென்னையில் உபயோகிக்கப்படும் அலைபேசிகளின் இணைப்புகள் தானாகவே துண்டிக்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து அலைபேசி உபயோகிப்பாளர்கள் கூறியது,
    சென்னையில் கடந்த சில நாள்களாக அலைபேசி மூலம் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென எதிர்முனையில் பேசுபவர்களின் குரல் கேட்பதில்லை. அலைபேசித் தொடர்பு அமைதியாகிவிடுகிறது. ஆனால் உபயோகிக்கும் நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. அதாவது பேசுவதற்கான கட்டணம் மட்டும் வழக்கம்போல் எடுத்துக் கொள்கின்றனர். பிறகு நாம் ஹலோ சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். இணைப்பைத் துண்டித்துவிட்டு மீண்டும் தொடர்பு கொள்ளவேண்டியதுள்ளது. மேலும் அலைபேசி இணைப்பில் பேசிக்கொண்டிருக்கும்போதே 'தங்கள் அழைப்பு ஹோல்டில் வைக்கப்பட்டுள்ளது. சிறிது நேரம் காத்திருக்கவும் அல்லது மீண்டும் தொடர்பு கொள்ளவும்' என பதிவு செய்யப்பட்ட குரல் ஒலிக்கிறது.   நாம் சற்று நேரம் பொறுமையாக காத்திருந்தால் மீண்டும் இணைப்பு வருகிறது. அதற்குள் அடுத்த அழைப்புக்குரிய கட்டணம் செலுத்த வேண்டியதுள்ளது. நமது அலைபேசி சேவையில் மட்டும்தான் இந்த குறைபாடு உள்ளது என்ற தொடக்கத்தில் நம்பியவர்கள் பலர். ஆனால் இப்பிரச்னை அலைபேசி உபயோகிக்கும் பலருக்கு இருப்பது பிறகுதான் தெரியவந்தது.  இது குறித்து வெவ்வேறு அலைபேசி உபயோகிப்பாளர்கள், தத்தமது வாடிக்கையாளர் சேவை மையங்களைத் தொடர்பு கொண்டால், 'அப்படியா, ஒரு சேவைக் குறைவும் இல்லை. இருந்தாலும் கவனிக்கிறோம்' என அலட்சியமாகப் பதில் அளிக்கின்றனர் என்றனர்.
    இது குறித்து தகவல் கிடைத்தவுடன் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை  ஆணைய வளைத்தளத்தில் சேவை நிறுவனங்களின் பொறுப்பு அதிகாரிகள் மூலம் தகவல் பெற முயன்ற போது ஒருவரின் அலைபேசி தொடர்பு எண்ணும் அதில் இல்லை. பொறுப்பு அதிகாரிகள் அனைவருக்கும் நிரந்த இணைப்புத் தொலைபேசி எண்கள் (LAND Line) தான் தரப்பட்டுள்ளன. அதில் தொடர்பு கொண்டாலும் சம்மந்தப்பட்டவர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளவோ அல்லது தெளிவானப் பதிலைப் பெறவோ முடியவில்லை.  













 

No comments:

Post a Comment