Monday, 15 December 2014

திருவொற்றியூரில் ஊழியரின் சடலத்துடன் போராட்டம்: ரூ.20 லட்சம் இழப்பீடு

திருவொற்றியூர், டிச.14:திருவொற்றியூரில் உள்ள தனியார் டயர் ஆலை ஊழியர் தனஞ்செழியன் (34) வெள்ளிக்கிழமை விபத்தில் சிக்கி இறந்து போனார். இவருக்கு ஆலை நிர்வாகம் இழப்பீடு வழங்கக் கோரி ஊழியரின் சடலத்துடன் தொழிலாளர்கள் சனிக்கிழமை நள்ளிரவுவரை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து இறந்து போனவரின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. 
     திருவொற்றியூரில் தனியார் டயர் தொழிற்சாலை உள்ளது. மீஞ்சூர் அருகே உள்ள திருவெள்ளவாயல் கிராமத்தைச் சேர்ந்த தனஞ்செழியன் இத்தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் தனஞ்செழியன் வெள்ளிக்கிழமை வேலை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்றபோது ஊருக்கு அருகாமையில் எதிரில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த தனஞ்செழியன் திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர ஏற்கனவே இறந்து போய்விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து சடலம் பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 
   இதனையடுத பணிமுடித்து வீடு திரும்போதுதான் விபத்து ஏற்பட்டுள்ளதால் ஆலை நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இந்நிலையில் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு தனஞ்செழியனின் சடலத்தை ஆம்புலன்ஸ் மூலம் ஆலை வளாகத்திற்கு கொண்டுவந்து வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 
தொழிலாளர்கள் தரப்பில் ஒரு நாள் சம்பளப் பணம் சுமார் ரூ.10 லட்சமும்,  இதற்கு இணையாக ரூ. 10 லட்சம் ஆலை நிர்வாகம் சார்பிலும் இழப்பீடாக அளிக்க இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டதையடுத்து தனஞ்செழியனின் சடலமும் அவரது சொந்த ஊரான திருத்தணிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 
     இறந்து போன தொழிலாளரின் சடலத்துடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

No comments:

Post a Comment